கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த அவகாசம் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நிதி உள்ளிட்ட காரணங்களால் வரும் 30ஆம் தேதிக்குள் பெயர் பலகை மாற்றும் உத்தரவை அமல்படுத்துவது சிரமமான விஷயம் என்றும் அவகாசத்தை நீட்டிக்க கோரியும் வலியுறுத்தப்பட்டது.

இதன் காரணமாக நான்கு வாரங்களில் இந்த மனுவை பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்லாது நான்கு வாரங்கள் வரை தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையும் படிங்க: துணை வேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்திற்கு இடைக்கால தடை... நீதிமன்ற உத்தரவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு!

மே 30ஆம் தேதிக்குள் கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசின் உத்தரவை அமல்படுத்த தயாராக இருக்கிறோம்., ஆனால் நிதி உள்ளிட்ட காரணங்கள் தடையாக இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: நீட் தேர்வு முடிவுகள் வெளியிட தடை..! கறார் காட்டிய நீதிமன்றம்.. அதிர்ச்சியில் மாணவர்கள்..!