திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சேர்ந்தவர் தொழிலதிபரின் மகள் ரிதன்யா. இவருக்கு கவின்குமார் என்பவரோடு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி 78 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், கணவன் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ரிதன்யாவை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

இதனால் மனமடைந்து போன ரிதன்யா செய்வதறியாமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே தனது காரை ஓட்டிச் சென்ற ரிதன்யா தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் வழிபட்டுள்ளார். தொடர்ந்து சாலையோரமாக காரை நிறுத்திய அவர், தனது வாழ்க்கை தொடர்பாகவும், தனது சாவுக்கு யார் காரணம் என்பது தொடர்பாகவும் ஆடியோ ஒன்றை வாட்ஸ் அப் மூலம் தனது தந்தைக்கு அனுப்பி விட்டு தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையும் படிங்க: இந்தியா கூட சேராதீங்க... ஆப்கானிஸ்தான் காலில் விழுந்து கதறிய பாகிஸ்தான் தளபதி...!

தனது திருமண வாழ்க்கை சரியாக இல்லை என்றும் ஒருவனுக்கு ஒருத்தி தான் என்ற ஆடியோவையும் ரிதன்யா தன் அப்பாவுக்கு அனுப்பினார். மேலும், கணவன் கவின்குமார் மற்றும் மாமனார் கிருஷ்ணமூர்த்தி மாமியார் சித்ராதேவி ஆகியோர் தன்னை கொடுமைப்படுத்தியதாக ரிதன்யா வேதனை தெரிவித்திருந்தார்.

இனியும் தன்னால் வாழ முடியாது என தந்தைக்கு ஆடியோ அனுப்பி வைத்துவிட்டு ரிதன்யா எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ரதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தன் மகள் இறப்பு தொடர்பாக பேசிய ரிதன்யாவின் தந்தை நல்ல குடும்பம் எனக் கூறி திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் தனது மகளை மிகவும் கொடுமைப்படுத்தி இருந்ததாகவும் கூறினார். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தனது மகளை துன்புறுத்தி இருப்பதாக மிகுந்த வேதனையோடு தெரிவித்த ரிதன்யாவின் தந்தை, பிரச்சனை ஏற்பட்டபோது அனுசரித்து நடந்து கொள்ளுமாறு தனது மகளுக்கு அறிவுரை கூறியதாகவும் 10 நாட்கள் கழித்து இதுபோல் இனிமேல் நடக்காது என் மகன் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம் எனக் கூறி அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தார்.

ஊர் முழுக்க நல்ல குடும்பம் என்று சொல்கிறார்கள்., அனுசரித்து நடந்து கொள்ளுமாறு அடுத்த முறை பிரச்சனை வந்த போதும் கூறினேன்., உங்களிடம் ஒன்று போலவும் என்னிடம் ஒன்று போலும் உறவினர்களிடம் ஒரு விதமாகவும் நடந்து கொள்வதாக தன் மகள் குற்றம் சாட்டியதை சுட்டிக்காட்டினார். பண்ணாத கொடுமை பண்ணி., பிள்ளைய சின்னாபின்னம் ஆக்கிட்டாங்க., அவ சொல்லுவதை கேட்டால் கண்ணுல ரத்தம் வருதுங்க., அவ்வளவு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கொடுமை பண்ணி இருக்காங்க... வீட்டிற்குள் சென்றால் கதவை பூட்டி வெச்சிக்கிறாங்க.

வெளியில் விடுவதே இல்லை.. 500 பவுன் 300 பவுன் என போடுவதாக உனது அப்பா கூறினாரே என்ன ஆச்சு என கேட்டு கொடுமைப்படுத்தினார்கள். என் பிள்ளைக்கு நடந்தது போல இனி யாருக்கும் நடந்து விடக்கூடாது., நல்ல குடும்பம் பாரம்பரிய குடும்பம் என சொல்லி கல்யாணம் செஞ்சாங்க.. என சொல்லி ரிதன்யாவின் தந்தை கதறி அழுதது காண்போரை கலங்க செய்தது.
இதையும் படிங்க: #BREAKING: பூவை ஜெகன்மூர்த்தி MLA-க்கு முன்ஜாமின்... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு