தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஒவ்வொரு தொகுதியிலும் எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், நெல்லை மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு பின்னடைவைச் சந்தித்து வருவது ஆளுங்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சபாநாயகர் அப்பாவுக்கும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிட்ட கிறிஸ்டோபருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இன்று காலைத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவுகள் வெளியானபோது.

தவெக வேட்பாளர் கிறிஸ்டோபர், சபாநாயகர் அப்பாவுவை விட அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவரான சபாநாயகர் அப்பாவு, முதல் சுற்றிலேயே பின்தங்கியிருப்பது அரசியல் நோக்கர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒரு பெண் கூட வீதிக்கு வர வேண்டிய அவசியம் இருக்காது! ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு உறுதி!

நெல்லை மாவட்டத்தின் கடலோரத் தொகுதியான ராதாபுரத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், தென் தமிழகத்தில் தவெக-வின் செல்வாக்கைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது. சபாநாயகர் போன்ற முக்கியப் பொறுப்பில் உள்ளவரே பின்னடைவைச் சந்தித்து வருவதால், ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளும் பெரிய மாற்றத்தை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த சுற்றுகளில் இந்த முன்னிலை நீடிக்குமா என்பதை அறியத் தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஒரு பெண் கூட வீதிக்கு வர வேண்டிய அவசியம் இருக்காது! ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு உறுதி!