தமிழக முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 77 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் 60 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்கிறது. மீதமுள்ள 17 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 60 சுங்கச்சாவடிகளிலும், மாநில நெடுஞ்சாலையில் உள்ள 8 சுங்கச்சாவடிகளிலும் சுங்க கட்டணம் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது. 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்படுவதால் தமிழகம் முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக தனியார் பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள், சரக்கு வாகனங்கள் நீண்ட தூரம் பயணிக்கும் போது பல சுங்கச்சாவடிகளை கடக்க வேண்டிய இருப்பதால், தினமும் இயக்க செலவில் சுங்க கட்டண உயர்வு பெரிய சுமையாக மாறியுள்ளது. இதனால் கிராமப்புற சாலையில் நெரிசல் அதிகரித்து சாலை சேதம் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: விடிந்ததுமே பேரதிர்ச்சி... கேஸ் சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு... மாத தொடக்கத்திலேயே இப்படியா?
சுமார் மூன்று முதல் 5 சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் கார்களுக்கான கட்டணம் 5 ரூபாய் வரையிலும் கனக ரக வாகனங்களுக்கான கட்டணம் 40 ரூபாயும் உயர வாய்ப்புள்ளது. இதனால் அத்தியவாசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
குறிப்பாக சென்னை, கன்னியாகுமரி, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்திருக்கக்கூடிய 60 சுங்கச்சாவடிகள், 60 கிலோமீட்டர் நீளமுள்ள வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மதுரை வெளி வட்ட சாலை, நாவலர் உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலையில் அமைந்திருக்கக்கூடிய எட்டு சுங்கச்சாவடிகள் என ஒட்டுமொத்த சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்க கட்டணம் உயர்வு உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வானகரம், பரனூர், சூரப்பட்டு, நல்லூர், பட்டரை, பெரும்புதூர், ஆத்தூர் உள்ளிட்ட சென்னை சுற்றி உள்ள சுங்கச்சாவடிகளிலும், கப்பலூர், சமயபுரம், நாங்குநேரி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் கட்டணம் உயரத்தப்பட்டுள்ளதற்க்கு ஓட்டுநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தென்னமாதேவி, கெங்கராம்பாளையம், சேலியமேடு, ஆத்தூர், நங்கிலி கொண்டான் ஆகிய ஐந்து சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் படி விழுப்புரம் புதுச்சேரி செல்லும் சாலையான கெங்கராம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் சுங்கச்சாவடியில் நள்ளிரவு முதல் 5 ரூபாய் முதல் 315 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
- கெங்கராம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் ஒருமுறை பயணிக்க 60 ரூபாயும் இருமுறை பயணிக்க 90 ரூபாயும் மாதாந்திர கட்டணமாக 1195 லிருந்தது 50 ருபாய் உயர்த்தி 2045 உயர்த்தப்பட்டுள்ளது.
- இலகுரக வாகனங்கள் ஒருமுறை செல்ல 95 ரூபாயாக இருந்தது 100 ரூபாயாகவும், இருமுறை செல்ல 145 ரூபாயாக இருந்தது 150 ரூபாயாகவும் மாதாந்திர கட்டணமாக 3225 லிருந்து 80 ரூபாய் உயர்த்தி 3305 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- டிரக் மற்றும் பேருந்துகளுக்கு ஒருமுறை செல்ல 205 ரூபாயாக இருந்தது 210 ரூபாயாகவும் இருமுறை செல்ல 305 லிருந்து 310 ரூபாயாகவும் மாதாந்திர கட்டணமாக 6,755லிருந்து 170 ரூபாய் அதிகரித்து 6,925 உயர்த்தி வசூலிக்கபடுகிறது.
- மூன்று அச்சில் கொண்ட வாகனங்கள் ஒருமுறை செல்ல 220 ரூபாயாக இருந்தது 225 ஆக உயர்த்தபட்டுள்ளது. இருமுறை செல்ல 330 லிருந்து 340 ரூபாயாகவும் மாதாந்திர கட்டணமாக 7,370 ரூபாய் லிருந்து 180 அதிகரித்து 7550 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ’
- ஆறு அச்சுகள் கொண்ட வாகனங்கள் ஒருமுறை செல்ல 320 லிருந்து 325 ரூபாயாகவும் இருமுறை செல்ல 475 லிருந்து 490 ரூபாயாகவும் மாதகட்டணம் 10,595 லிருந்து 260 ரூபாய் உயர்த்தி 10,855 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளனது.
- பல அச்சு கொண்ட வாகனங்கல் ஒரு முறை பயணிக்க 385 லிருந்து 395 ரூபாயாகவும், இருமுறை பயணிக்க 580 லிருந்து 595 ஆகவும் மாதகட்டணம் 12,900 லிருந்து 315 ரூபாய் உயர்த்தி 13,215 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவை பாஜவிற்கு விற்றுவிட்டார்... எடப்பாடி பழனிசாமியை விளாசிய உதயநிதி ஸ்டாலின்...!