தலைமை செயலாளரை மாற்றிய உத்தரவை திரும்ப பெற திமுக பொருளாளர் டி.ஆர். பாலு வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கையாக தமிழக அரசின் தலைமைச் செயலாளரை மாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 8, 2026 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவில், தமிழ்நாடு தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்த என். முருகானந்தம் ஐஏஎஸ் அதிகாரியை உடனடியாகப் பணியிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக எம். சாய்குமார் ஐஏஎஸ் அதிகாரியை புதிய தலைமைச் செயலாளராக நியமித்தது. அதே நேரத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை உள்ளிட்ட ஆயுதப் போலீஸ் மற்றும் விழிப்புணர்வு பிரிவின் டிஜிபியாக இருந்த எஸ். டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மாற்றி, சந்தீப் மிட்டல் ஐபிஎஸ் அதிகாரியை அந்தப் பொறுப்பில் நியமித்தது.

இந்த உத்தரவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை “அத்துமீறிய அரசியல்”, “ஒருதலைப்பட்சமான செயல்” என்று விமர்சித்தார். பாஜகவுக்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் இத்தகைய மாற்றம் செய்யப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஊழல் தடுப்புத்துறை தலைவரா?... டி.ஆர். பாலு ஆவேசம்...!
தலைமை செயலாளரை மாற்றிய உத்தரவை திரும்ப பெறக் கோரி திமுக பொருளாளர் டி.ஆர். பாலு கடிதம் எழுதினார். தலைமைச்ச் செயலாளர் மற்றும் DVAC-இன் தலைமை இயக்குநரை மாற்றிய உத்தரவை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார். தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற பணிமாறுதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எந்தவொரு முக்கிய அரசியல் கட்சியும் எவ்விதப் புகாரும் அளிக்காத போதும் தலைமை செயலரை மாற்றியதற்கு தர்க்க ரீதியான காரணம் இல்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க: அதிரடி சோதனை..! ரூ.9 கோடி மதிப்புள்ள வைரம், தங்கம், வெள்ளி பறிமுதல்..!!