தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்புராஜ் இவரது மனைவி காளீஸ்வரி இவர்களது மூத்த மகள் தூத்துக்குடி குறுக்கு சாலை பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10 ஆம் தேதி தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவி மாலை நேரத்தில் வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் இரவு முழுவதும் கிராமம் முழுவதும் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. பின்னர் வேடநத்தம் கிராமம் காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்ட மாணவி உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
மாணவி கொலை செய்யப்பட்டு ஒன்பது நாட்கள் ஆன நிலையில் குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை எனக் கூறி உறவினர்கள் போராடி வந்தனர். சந்தேகம் அவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை உள்ளிட்டவை நடத்தப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் 30 வயதான முனீஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று தகவல் கசிந்து உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி கொலை குற்றவாளி சிக்கியது எப்படி என்று பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. மாணவி கொல்லப்பட்ட இடத்திற்கு சற்று அறிவியல் கிடைத்த பைக் பதிவினை வைத்து போலீசார் முதலில் விசாரணை நடத்தியுள்ளனர். சம்பவ இடத்தில் கிடைத்த பைக் பார்த்திபனுரை சேர்ந்த ஒருவருடையது என்பதும் அது திருடு போனதும் தெரிய வந்தது. பைக்கை திருடிய நபர் தான் மாணவியை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்ததால் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: மாணவி கொலை... போராடும் கிராமமக்கள்... சந்தேக நபரிடம் பரிசோதனை..!!
சிசிடிவி காட்சியில் சிக்கிய நபர் சாயல்குடியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பதும் பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் முனீஸ்வரனை பிடித்த தனிப்படை போலீசார் மாணவியின் நக இடுக்கில் சிக்கி இருந்த சதைத் துணிக்கை வைத்து டிஎன்ஏ சோதனை செய்துள்ளனர். மாணவியின் நகத்தில் இருந்த சதை துணுக்கு முனீஸ்வரனின் டிஎன்ஏ உடன் ஒத்துப்போனதால் உடனடியாக கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பாதிக்கப்பட்ட மாணவியின் புகைப்படம் வெளியான விவகாரம்..!! பாய்ந்தது வழக்கு..!! போலீஸ் கடும் எச்சரிக்கை..!