தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய், வருகிற அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை முன்னெடுக்கும் வகையில் தேர்தல் பணிக்குழுக்களையும் கண்காணிப்பாளர்களையும் நியமித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து, இந்த இரு தொகுதிகளிலும் கழக வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வெற்றிச் சின்னமான விசில் சின்னத்துடன் மீண்டும் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்ற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்தத் தொகுதிகளில் கழக வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விரைவில் முன்னெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.தேர்தல் கண்காணிப்பாளர்களாக என். ஆனந்த், கே.ஏ. செங்கோட்டையன், சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இரு தொகுதிகளின் தேர்தல் பணிகளையும் கண்காணிப்பார்கள்.மதுராந்தகம் பொது சட்டமன்றத் தொகுதியில் கழக வேட்பாளராக ஆதவ அர்ஜனா அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு உதவும் இணைப் பொறுப்பாளர்களாக பி. ராஜ்குமார், கே. தென்னரசு, ஆர். வினோத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். துணைப் பொறுப்பாளர்களாக சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. பி. சரவணமூர்த்தி, செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. எஸ். தியாகராஜன், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. பி. விஜயராஜ், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. ஜெ. காமாட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எம்.எஸ். பாலாஜி ஆகியோர் உள்ளனர்.தாராபுரம் பொது சட்டமன்றத் தொகுதியில் கழக வேட்பாளராக கே.ஜி. அருண்ராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: விறுவிறு இடைத் தேர்தல்... விடாமல் துரத்தும் திமுக... தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்..!!
இணைப் பொறுப்பாளர்களாக எம். விஜய் பாலாஜி, சி. விஜயலட்சுமி, யோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். துணைப் பொறுப்பாளர்களாக திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. எஸ். பாலமுருகன், திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. வி. சத்தியபாமா, பல்லடம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. கே. ராம்குமார், நாமக்கல் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. சி.எஸ். திலீப், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. எம். சத்யா ஆகியோர் உள்ளனர்.மேற்கண்ட குழுவினர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வார்கள்.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் பரபரப்பு!! இரு தொகுதிகள்.. தவெகவின் இரு வேட்பாளர்கள்..!! விஜய்யின் முடிவு என்ன?