பள்ளிக் காலை உணவில் பல்லி இருந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மாணவர்களின் உயிருடன் விளையாடுவதாக தவெக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் தடுக்க முதல்வர் விஜய் தனிக்குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பூந்தமல்லி அரசு உதவிபெறும் பள்ளியில், பல்லி விழுந்த காலை உணவைச் சாப்பிட்ட 17 பிஞ்சுக் குழந்தைகள் வாந்தி மற்றும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய தவெக அரசின் இந்த மெத்தனப் போக்கினை வன்மையாகக் கண்டிப்பாக கூறினார்.

தவெக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பள்ளிகளில் 'ஆய்வு' என்ற பெயரில் செய்யும் போட்டோஷூட் அனைத்தும் வெறும் 'ரீல்' என்பதற்கு மாணவர் உணவில் கிடந்த பல்லியே சாட்சி என்றார். விளம்பர மோகத்தை விடுத்து, உணவு தயாரிக்கும் இடங்களில் போதிய சுகாதார ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இத்தகைய விபரீதங்கள் நடந்திருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் 750 புதிய AC மின்சார பேருந்துகள்..! விஜய் தொடங்கி வைத்த மெகா திட்டம்..!!
எனவே, இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தரமான சிகிச்சை வழங்கப்படுவதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார். மேலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபரீதங்கள் நிகழாதவாறு, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் உணவின் தரத்தை சோதிக்கத் தனிக்குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ரகசியக் காப்பு உரிமையை மீறிய முதல்வர்..? ஊழல் LIST விவகாரம்... கிருஷ்ணமூர்த்தி கேள்வி..!