தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஈரோடு மாவட்டத்தில் இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். இது கரூர் துயர சம்பவத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் அவர் நடத்தும் முதல் பெரிய பொதுக்கூட்டம். பெருந்துறை தாலுகாவில் உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் நடந்தது. அலை கடலென மக்கள் திரண்டனர். காலை முதலே விதையை காண்பதற்காக மக்கள் குவிய தொடங்கினர்.
ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பு குறித்து விஜய் கூறியுள்ளார். எப்போதும், என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் உடன் வருகிறீர்கள்.நீங்கள் காட்டும் எல்லையில்லா அன்பினாலும் ஆதரவினாலும் பெரும் உத்வேகம் அடைந்து வருகிறேன்., இந்த உத்வேகமே எனக்கு எப்போதும் மிகப் பெரிய உந்துசக்தியாக இருக்கிறது. எத்தனை அரசியல் கட்சிகள், எத்தனை ஆண்டுக்காலம் நம்மை ஆண்டாலும், வறுமையின் பிடியில் சிக்கியுள்ள என் அன்புக்கு உரியவர்களாகிய உங்களுக்கு ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும் என்று தெரிவித்தார். ஏக்கத்திலேயே, கனவுகளிலேயே காலங்கள் கடந்து போய்விடக் கூடாது என்றும் எனவே தான், வளர்த்து ஆளாக்கிய உங்களோடு இணைந்து உங்களுக்காக உழைக்கவே நாம் நம் அரசியல் பயணத்தைத் தொடங்கினோம் எனவும் தெரிவித்துள்ளார்.

அந்தப் பயணத்தில், உங்களைச் சந்திப்பதற்கு நாம் புறப்பட்டதில் இருந்தே எவ்வளவோ தடைகள் தொடர்ந்து நமக்கு வந்தவண்ணம் இருந்தன. அவற்றில் உங்களுக்குத் தெரிந்தவை பல. உங்களுக்குத் தெரியாதவை பல., ஆனால், அவற்றையெல்லாம் உங்களின் பேராதரவு மற்றும் தூய அன்பின் துணையோடு முறியடித்து வெற்றி அடைந்து வருகிறோம் என்றும் உங்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தூயசக்தி... தீயசக்தி... விஜய்க்கு அடுக்குமொழி பேச்சை கத்து கொடுத்து இருக்காங்க... - திருமா.
அந்த வகையில் இன்று மஞ்சள் மாநகரான ஈரோட்டில் நடைபெற்ற நமது சந்திப்பானது, வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தச் சந்திப்பில், அளப்பரிய அன்பும் ஆதரவும் அளித்த, என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது என விஜய் நெகிழ்ச்சி கூறினார்.
இந்த நெகிழ்ச்சிமிகு சந்திப்பை, மிகப் பிரம்மாண்டமாகவும் மிகுந்த பாதுகாப்புடனும் மெச்சத் தகுந்த வகையிலும் ஏற்பாடு செய்திருந்த நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன், அவருக்கு உறுதுணையாக இருந்த பொதுச் செயலாளர் ஆனந்த், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: வைரல் வீடியோ...!! “இதையெல்லாம் வேற எங்கேயாவது வச்சிக்கோ” - கூட்டத்திற்குள் வைத்து செங்கோட்டையனை அசிங்கப்படுத்திய தவெக தொண்டர்கள்...!