கல்வியில் மாணவ, மாணவிகளின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.

விஜய் கையினால் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவ, மாணவிகள் பலர் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்று வருகின்றனர். இந்நிலையில் 2025-ம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா இன்று மாமல்லபுரத்தில் நடக்கிறது.
இதையும் படிங்க: #BREAKING: உதவ சென்ற பெண்களை பூட்ஸ் காலால் உதைப்பதா? இதைதான் ஸ்டாலின் சொல்லிக் கொடுத்தாரா? - விஜய் ஆவேசம்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகை தந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில், மாணவர்களுக்கு பரிசளித்து ஊக்குவிக்க மாமல்லபுரத்தில் நிகழ்ச்சி நடக்கும் ஹோட்டலுக்கு விஜய் வந்துள்ளார்.
இதையும் படிங்க: மே 30ல் மாணவர்களை சந்திக்கிறார் விஜய்.. 2 கட்டங்களாக கல்வி விருது விழா..!