ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட 24 வகையான குடிமை பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 25ம் தேதி நடைபெற்றது. சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் 24,364 பேர் முதல்நிலை தேர்வை எழுதினர். இந்த நிலையில், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) நடத்திய சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.

இதனையே, யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர்பான அவரது பதிவில், தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும் நான் முதல்வன் திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் UPSC முதனிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓசி பஸ்ஸா! இது என்ன கோபாலபுரத்து பணமா? திமுக எம்.எல்.ஏ.வின் ஆணவ பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்..!

முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து முத்திரை பதிக்க வாழ்த்துவதாகவும் உங்கள் வெற்றிமுகங்களை நேரில் காண ஆவலாய் இருக்கிறேன் என்றும் வாழ்த்தி உள்ளார். இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் பயிற்றுநர்களுக்கும் தனது பாராட்டுகளை உரித்தாக்குவதாகவும் தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கே தமிழ்நாடு தான் லீடர்! யாராலும் அசைக்க முடியாது.. முதல்வர் பெருமிதம்!