காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதை அடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்தியா மீது மீண்டும் கடந்த 8 ஆம் தேதி இரவு பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், இந்திய விமானப் படை பதிலடியை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: சிம்லா ஒப்பந்தம் ரத்து... இந்தியாவுடன் போரிட தயாராகிறதா பாகிஸ்தான்?

இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இதனிடையே இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்பக்கொண்டன என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், நீண்ட நேர இரவு உரையாடலுக்குப் பிறகு அமெரிக்காவின் மத்யஸ்தத்தை இந்தியா பாகிஸ்தான் ஏற்று கொண்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் உடனடியான மற்றும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன், பொது அறிவு மற்றும் சிறந்த இண்டலிஜென்ஸை அந்த நாடுகள் கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் புரிந்து கொண்டதற்கு நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை அமெரிக்கா இந்த விஷயத்தில் தலையிடாது. இது நாடுகளும் விரைவில் போர் நிறுத்தத்தை அறிவிக்கும் என தான் நம்புவதாக ட்ரம்ப், கூறிய நிலையில் தற்போது தாமே இரு நாடுகள் இடையே பேசி போரை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியா - பாக். இடையே போர் வெடித்தால் என்ன ஆகும்? புட்டு புட்டு வைக்கும் அமெரிக்கா சிஐஏ அமைப்பு!!