உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி அதற்கு எக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்தார். பின்னர் அதில் பல மாற்றங்களையும் கட்டண சேவைகளையும் கொண்டு வந்தார். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்தியா உள்பட பல நாடுகளில் எக்ஸ் சமூக வலைதளம் முறையாக வேலை செய்யவில்லை என புகார்கள் எழுந்தன. இதை அடுத்து எக்ஸ் வலைதள பக்கம் முற்றிலுமாக முடங்கியது.

பயணர்களால் எக்ஸ் வலைதள பக்கத்தை லாக்- இன் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் சிலர் எக்ஸ் பக்கத்தில் உள்ள பதிவுகளை Refresh செய்து பார்க்க முடியவில்லை என புகார் தெரிவித்தனர். அதேபோல் புதிய பதிவுகளையும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட முடியவில்லை என்றும் கூறப்பட்டது. அதை மீறி செய்தால் Something went wrong, Try reloading என்று வருவதாக பல்வேறு பயணர்கள் தங்களது அனுபவங்களை மற்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
இதையும் படிங்க: 8 ஆயிரம் கணக்குகள் முடக்கம்..! மோடி அரசின் அதிரடி உத்தரவுக்குப் பணிந்த எக்ஸ் தளம்..!

இதுக்குறித்து டவுன் டிடெக்டர் எனும் வலைதளத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 100 புகார்கள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. எக்ஸ் தளத்தில் இந்த பிரச்சனை செல்போன் மட்டுமின்றி கம்ப்யூட்டரிலும் ஏற்படதாக கூறப்படுகிறது. இதனால் நெட்டிசன்கள் செய்வதறியாது அவதிக்குள்ளாகினர். ஆனால் இந்த பிரச்சனை குறித்து எக்ஸ் வலைதள பக்கத்தின் நிறுவனம் எந்த விளக்கத்தையும் தரவில்லை என புகார்கள் எழுந்தன.

ஒரு தரப்பினர் இப்படி கூறும் நிலையில் மறுபுறம் இன்னொரு தரப்பினர் எக்ஸ் வலைதள பக்கம் வழக்கம்போல் பிரச்சனைகள் இன்றி இயக்குவதாகவும் கூறப்படுகிறது. பல புகார்கள் எழுந்த நிலையில் தற்போது எக்ஸ் வலைதளம் மௌனம் கலைத்துள்ளது. எக்ஸ் நிறுவன தரப்பில் கொடுத்த விளக்கத்தில், டேட்டா சென்டர் செயலிழப்பால் நேற்று முதல் சிக்கல்களைச் சந்தித்து வருகிறோம்; தொழில்நுட்ப சிக்கலைத் தீர்க்க எங்கள் குழு உழைத்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீளா துயரத்திற்கு மக்கள் செல்வார்கள்.. புதிய விதிகளை திரும்ப பெறுக.. ரிசர்வ் வங்கிக்கு விஜய் வலியுறுத்தல்..!