காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில், அதிமுக சார்பில் மாவட்ட துணை செயலாளர் செந்தில் ராஜன் ஏற்பாட்டில் பொது மக்களுக்கு நல திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2500 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவை உள்ளிட்ட நல்ல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை கலந்து கொண்ட 2500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. பெண்கள் பலரும் நீண்ட வரிசையில் காத்திருந்து, அமைதியாக வரிசையில் நின்று கொண்டு உணவுகளை பெற்றுச் சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் வைகைச் செல்வன் மற்றும் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வம் கூறுகையில், தமிழ்நாட்டில் இன்று தோட்டத்து வீடு என்ன சொல்லக்கூடிய பகுதிகளில் தொடர்ச்சியாக கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தோட்டத்து வீடுகளை குறிபாட்டு போலீஸ் நம்பர் நடைபெற்றது.
இதையும் படிங்க: முக்கியமான மசோதா மிஸ்ஸிங்.. ஆளுநர் ஒப்புதல் கொடுத்த 4 மசோதா என்னனு தெரியுமா?

ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக்கில் முறைகேடு செலுத்தியிருக்கிறார்கள். ஆனால் அப்பாவியாக இருக்கும் அண்ணா திராவிட முன்னேற்ற கழக முன்னாள் அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அமலாக்கத்துறை ரெய்டுகளை திசை திருப்ப தமிழக அரசுக்கு சிறுபிள்ளை தனமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஆகாஷ் பாஸ்கர் திடீரென இட்லி கடை தோசை கடை என்ற படத்தை எல்லாம் தயாரிக்கிறார். சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் போன்றவர்களை 100 கோடி 200 கோடி 500 கோடி என செலவு செய்து படத்தை தயாரித்து வருகிறார். இது எல்லாம் யார் பணம் என்று கேட்பதற்காகவே ரெய்டு நடக்கிறது.

50 தொகுதிகளில் படித்துக் கொண்டே ஜெயிக்க பாமக நிர்வாகிகளை தைலாபுர தோட்டத்திற்கு ராமதாஸ் அழைத்தார். வீட்டிலே பாமக நிர்வாகிகள் படுத்துக்கொண்டு ஒத்திகை பார்ப்பது போல, வெற்றி பெறுவதற்கு வழி தெரியும் நாங்கள் படித்துக் கொண்டே ஜெயிப்போம் என ஒத்திகை பார்த்தார்கள். தந்தைக்கும் மகனுக்கும் இருக்கும் பிரச்சினை முற்றியுள்ளது. யார் படுத்துக்கொண்டு ஜெயிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் இளம் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஞானசேகரன் திமுக காரர் இல்லை. திமுகவின் அனுதாபி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். யார் அந்த சார்? என்ற கேள்விக்கு பதில் இல்லை. 20 வயது பெண்கள் பலர் திமுகவினர் வலையில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை நேரடியாக பத்திரிக்கையாளர் முன் தோன்றி ஒரு பெண் புகார் அளித்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எல்லோரும் தன்னை அப்பா.. அப்பா.. என அழைக்கிறார்கள் என பெருமை பீற்றிக் கொள்கிறார். ஒரு பெண் திமுக நிர்வாகியால் பாதிப்பு அடைந்திருக்கிறார். தற்போது அப்பாவாக இருந்து என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என அதிமுக சார்பில் கேள்வி எழுப்புகிறேன் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்த டைம் மிஸ் ஆகாது..! டெல்லி செல்லும் மு.க.ஸ்டாலின்.. பிரதமரை சந்தித்த பேச திட்டம்.!