வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், எங்கள் போட்டு எங்கள் உரிமை, எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது, எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான், யாரையும் நம்பி ஏமாற மாட்டோம், எங்கள் வார்த்தையில் இருந்து மாற மாட்டோம், இது நிஜம் என்று அனைவரையும் உறுதிமொழி எடுக்கச் செய்தார்.
தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளையை வைத்து குட்டி கதையுடன் தனது உரையை தொடர்ந்தார். சிறிய காளையுடன் சின்ன பையன் மாட்டிக்கொண்டதாக அனைவரும் நக்கலும் நையாண்டியமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு கதையை கூறினார். அந்த ஜல்லிக்கட்டு காளை தான் தமிழ்நாட்டின் அரசியல் களம் என்றும் அந்த சிறுவன் தான் தமிழக வெற்றி கழகம் எனவும், அந்த கதையில் வரும் பெரியவர் தான் மக்கள் என்றும் தெரிவித்தார். அந்த கதை புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என்று கூறினார்.

நம்முடைய ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் நான் நேரடியாக வந்து என்னுடைய சொந்தங்களாகிய உங்கள் அனைவரையும் சந்திப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தார். முதலமைச்சரின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் ஏமாந்து இருப்பதாக கூறினார். ஒன்றுக்கும் உதவாத பால் டப்பாவை முதலமைச்சர் உருட்டி கொண்டிருப்பதாக தெரிவித்தார். தமிழ்நாடு vs என் டி ஏ தேர்தல் என முதலமைச்சர் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... வேலூரில் விஜய் களமிறங்கும் முன்பே... தரமான சம்பவம் செய்த தவெக...!
இது விஜய்க்கு ஒரு ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர் என்று தெரிவித்தார். தூய சக்தி தமிழக வெற்றி கழகத்திற்கும் தீய சக்தி திமுக கட்சிக்குமான போர் என்று தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தில்லாக நிற்கும் என்றார். தற்போது நடப்பது அதிசய எலக்சன் என்று கூறினார். ஒட்டுமொத்தமாக எல்லோரும் சேர்ந்து தன்னை எதிர்ப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: TWIST மேல TWIST..!! அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் தவெகவில் ஐக்கியம்..!!