கட்சி பணிகள், பூத் கமிட்டி அமைத்தல், உறுப்பினர் சேர்க்கை, பொறுப்பாளர்கள் நியமனம் என அடித்து தூள் கிளப்பி கொண்டிருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். 2026 ஆட்சியை பிடித்து அரியணை ஏறி விட வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், கட்சியில் 7வது கட்டமாக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு, கழகப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் விதமாக, கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி மொத்தம் 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்றும் புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதாகவும், புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: விஜய் தான் "BEST CHOICE".. யாரும் உருப்படி இல்ல! பெரிய ஐஸாக தலையில் வைத்த அருண்ராஜ்..!

அதன்படி, அரியலூர், ராணிப்பேட்டை கிழக்கு, ராணிப்பேட்டை மேற்கு, ராமநாதபுரம் கிழக்கு, ராமநாதபுரம் மேற்கு, ஈரோடு கிழக்கு, ஈரோடு மாநகர் மாவட்டம், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு, கரூர் கிழக்கு, கரூர் மேற்கு, கள்ளக்குறிச்சி கிழக்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, கன்னியாகுமரி மத்திய மாவட்டம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் என பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவை தெற்கு, கோவை புறநகர் கிழக்கு, கோவை புறநகர் வடக்கு, கோவை மாநகர் மாவட்டம், சிவகங்கை கிழக்கு, சிவகங்கை தெற்கு, சிவகங்கை வடக்கு, செங்கல்பட்டு வட மேற்கு என 120 மாவட்டங்களாக பிரித்து அந்தந்த மாவட்டங்களுக்கு என மாவட்ட கழக செயலாளர், இணைச் செயலாளர்,2 துணைச் செயலாளர்கள், 10 செயற்குழு உறுப்பினர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தவெகவில் ஐக்கியமான VIP-க்கள்..! அரசியலில் ஜெட் வேகத்தில் பறக்கும் விஜய்..!