தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்குத் தொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீடு உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினருடன் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதேபோல், சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான நிறுவன அலுவலகத்திலும், சென்னையில் தேனாம்பேட்டை, தி.நகர், அண்ணா சாலை, பெசன்ட் நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மீண்டும் செந்தில் பாலாஜிக்கு முக்கிய பொறுப்பு... திமுக போடும் தேர்தல் கணக்கு!

இந்த நிலையில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் மற்றும் அவரது மனைவியை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: ரூ.1,000 கோடி மதுபான ஊழல்... டாஸ்மாக் உயரதிகாரிகளுக்கு புதிய சம்மன்..! மீண்டும் ED விறுவிறுப்பு..!