தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதில் இருந்து தொடங்கிய கடும் சர்ச்சை, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், பிரச்சினைகளையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விஜய் தலைமையிலான புதிய கட்சியான தமிழக வெற்றி கழகம், தேர்தல் ஆணையத்திடம் சின்னம் கோரியபோது, அது ஒரு வழக்கமான நடைமுறையாகத் தோன்றினாலும், விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட பிறகு அது பல்வேறு அரசியல், நிர்வாக மற்றும் சமூக அடுக்குகளில் சர்ச்சையைத் தூண்டியது.
தவெக கட்சி 2024ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியாக இருந்த நிலையில், 2025 நவம்பர் மாதம் தேர்தல் ஆணையத்தை அணுகி, பொதுச் சின்னம் ஒதுக்கீடு கோரியது. கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டு, பத்து விருப்பச் சின்னங்களைப் பட்டியலிட்டனர்.
அவற்றில் விசில் முதல் தேர்வாக இருந்தது. தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியது. அப்போது இருந்தே பல்வேறு இடங்களில் விசில் பயன்படுத்தக் கூடாது என்ற சர்ச்சை நிலவி வந்தது. வாக்குச்சாவடி மையம் வரைக்கும் விசில் சர்ச்சை வெடித்துள்ளது.
இதையும் படிங்க: ஓட்டுப்போடுவதை வீடியோ எடுத்து இன்ஸ்டா ரீல்ஸ் போட்ட தவெக நிர்வாகி கைது... என்ன தண்டனை தெரியுமா?
இதனிடையே கரூரில் வாக்குச்சாவடி மையத்தில் ஹோம் கார்டு ஒருவர் விசில் ஊதி இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் எதற்காக விசில் என்று கேட்டுள்ளார். இது ஒரு கட்சியின் சின்னம் என்று கூறிவிட்டு அதை எடுத்து விடுங்கள் என்று கோபத்தில் பேசினார். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கட்சிக்கு விசில் செல்லும் ஒதுக்கப்பட்டதில் இருந்தே கடும் சர்ச்சை நிலவி வந்த நிலையில் ஓட்டு போடும் நேரத்தில் கூட விசில் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
இதையும் படிங்க: சிக்கித் தவிக்கும் வாக்காளர்கள்..! வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கணும்..! விஜய் வலியுறுத்தல்..!!