நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ், அர்ஜூன் எரிகைசி ஆகியோர் பங்கேற்றனர். அதேபோல் நார்வேவைச் சேர்ந்த 5 முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் உள்பட மொத்தம் 6 பேர் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் குகேஷ், அமெரிக்கா வீரரான பாபியானோ கருனாவை சந்தித்தார். 4 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இதைத்தொடர்ந்து வெற்றி, தோல்வியை முடிவு செய்ய நடந்த டைபிரேக்கரில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 51-வது நகர்த்தலில் பாபியானோ கருனாவுக்கு அதிர்ச்சி அளித்தார். இது குகேஷ் பெற்ற 2-வது வெற்றியாகும்.
இதையும் படிங்க: இரண்டாம் தகுதி சுற்றுக்கு முன்னேறியது மும்பை அணி... 20 ரன் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி!!

இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் குகேஷ், நார்வேவின் கார்ல்சனுடன் மோதினார். வெள்ளை நிற காயுடன் ஆட்டத்தை தொடங்கிய குகேஷை விட கார்ல்சனே பெரும்பாலான சமயங்களில் ஆதிக்கம் செலுத்தினார். இருப்பினும் சாமர்த்தியமாக விளையாடிய குகேஷ் இறுதியில் வெற்றி பெற்றார். தனது தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத கார்ல்சன், ஆத்திரத்தில் மேஜையை கையால் ஓங்கி அடித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மறுபக்கம் குகேஷ், தனது வெற்றியின் மகிழ்ச்சியை ஆனந்த கண்ணீர் மூலம் வெளிப்படுத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் நார்வே செஸ் போட்டியின் புள்ளிகள் பட்டியலில், குகேஷ் 8.5 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கார்ல்சன் மற்றும் அமெரிக்காவின் பேபினோ கரானாவை விட வெறும் ஒரு புள்ளிகள் மட்டுமே பின் தங்கியுள்ளார்.
இதுதொடர்பாக குகேஷின் பயிற்சியாளர் விஷ்ணு பிரசன்னா கூறுகையில், 'குகேஷின் திறமையை நாம் பாராட்ட வேண்டும். நீண்ட நேரம் தோல்வியின் விளிம்பில் மட்டுமே இருந்த அவர் தொடர்ந்து போராடி கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். தற்போது, குகேஷ் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்,' என்றார்.
இதையும் படிங்க: மும்பை அணியில் மூன்று மாற்றங்கள்... கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய தகவல்!!