இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஜோடி நிதானமான தொடக்கம் கொடுத்தது. முதல் செஷன் முடியும் தருவாயில் கே.எல்.ராகுல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கே.எல்.ராகுல் 78 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்தார்.

முதல் விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஜோடி 24.5 ஓவர்களில் 91 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய சாய் சுதர்சன் 4 பந்துகளை சந்தித்த நிலையில், ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 25.4 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையும் படிங்க: நாங்க பெருமைக்கு தான் விளையாடுகிறோம்.. கவலையாக சொன்ன ரிஷப் பண்ட்!!

பின்னர் கேப்டன் ஷுப்மன் கில், ஜெய்வாலுடன் இணைந்து ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 144 பந்துகளில், ஒரு சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இது அவரது 5-வது சதமாக அமைந்தது. அதன்பின்னர், ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அவர் 159 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்தார். அதே வேளையில், ஷும்பன் கில் அதிரடியாக ஆடி 126 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் இந்திய கேப்டனாக அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்து சுப்மன் கில் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 1951-ல் விஜய் ஹசாரேவும் 1976-ல் சுனில் கவாஸ்கரும், 1987-ல் வெங்சர்க்காரும் 2014-ல் விராட் கோலியும் இந்திய கேப்டனாக அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த நிலையில் தற்போது 5வது இந்திய கேப்டனாக சுப்மன் கில் சதமடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டாஸ் வென்ற இங்கிலாந்து; இன்றைய ஆட்டத்தில் சாய் சுதர்சன் அறிமுகம்... கேப்டன் கில் முக்கிய தகவல்!!