இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்த் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்த இந்திய அணி, 221 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அப்போது களத்திற்கு வந்த பண்ட், இங்கிலாந்து பந்துவீச்சை விளாசினார். பொறுப்புடன் ஆடிய அவர், பொறுமையாக ரன்களை குவித்தார்.

இந்த நிலையில் பண்ட் 65 ரன்கள் எடுத்திருந்த போது இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. தொடர்ந்து அதிரடி காட்டிய பண்ட் 99 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது ரசிகர்கள் நினைத்த மாதிரியே சிக்ஸர் அடித்து தன்னுடைய சதத்தை பண்ட் பூர்த்தி செய்தார். சதம் அடித்தவுடன் வழக்கம் போல் குட்டிக்கரணம் அடித்து தன்னுடைய சதத்தை அவர் கொண்டாடினார்.
இதையும் படிங்க: நாங்க பெருமைக்கு தான் விளையாடுகிறோம்.. கவலையாக சொன்ன ரிஷப் பண்ட்!!

இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் தோனியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். தோனி ஆறு சதம் அடித்த நிலையில் பண்ட், தற்போது ஏழு சதம் அடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இங்கிலாந்துக்கு எதிராக பண்ட் நான்கு சதம் அடித்திருக்கிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பண்ட் 3 சதம் இங்கிலாந்து மண்ணிலும், இரண்டு சதம் இந்திய மண்ணிலும் அடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதமும், தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒரு சதமும் பண்ட் அடித்துள்ளார். இதன் மூலம் பெரிய வீரர்களை அந்நிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறும் நிலையில் கடினமான ஆடுகளங்களில் ஐந்து சதங்களை அடித்து அசத்தியிருக்கின்றார். மறுமுனையில் 150 ரன்கள் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கில் 142 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க: 7 ஆண்டுகளுக்குப் பிறகு கம் பேக் கொடுத்த கருண் நாயர்... இப்படி ஆகும்னு எதிர்பாக்கல!!