இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் கருண் நாயர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு கம் பேக் கொடுத்தார். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக கருண் நாயர் மூன்று சதம் விளாசினார். அதன்பின் அடுத்த தொடரில் அதிரடியாக நீக்கப்பட்டார். அதன் பிறகு பல ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய கருண் நாயர், கடந்த இரண்டு ஆண்டுகளாக ரன்களை குவித்துள்ளார்.

இதனிடையே விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் கருண் நாயருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக 3006 தினத்திற்கு பின் இந்திய அணியில் கருண் நாயர் இடம் பிடித்தார். இதனால் கருண் நாயர் பெரிய அளவில் சாதிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 430 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற ஸ்கோரில் கில் வெளியேறிய நிலையில் அப்போது களத்திற்கு கருண் நாயர் வந்தார்.
இதையும் படிங்க: அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

ஆனால் தேவையில்லாமல் ஒரு ஷாட் ஆடி ஒலி போப்பின் அபார கேட்சால் ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக வெறும் 4 பந்துகளை மட்டுமே தாக்குப் பிடித்த கருண் நாயர் டக் அவுட் ஆனார். இது கருண் நாயருக்கு மிகவும் மோசமான கம்பேக்காக அமைந்தது. எனினும் கருண் நாயருக்கு இரண்டாவது இன்னிங்சில் வாய்ப்பு கிடைக்கும். அதில் அவர் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தால் மட்டுமே அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் கருண் நாயர் இடம்பெற்று இந்திய அணியில் உறுதியான இடத்தை கொடுக்க முடியும்.

முதல் இன்னிங்சில் சாய் சுதர்சன், கருண் நாயர் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. கருண் நாயருக்காக காத்திருந்த ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். வானம் மேகமூட்டமாக மாறியவுடன் பந்து ஸ்விங் ஆக தொடங்கியவுடன் இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கில் தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டாஸ் வென்ற இங்கிலாந்து; இன்றைய ஆட்டத்தில் சாய் சுதர்சன் அறிமுகம்... கேப்டன் கில் முக்கிய தகவல்!!