2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியும் பஞ்சாப் அணியும் இறுதிப் போட்டியில் இன்று மோதுகிறது. அகமதாபாத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தை பார்க்க சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக ரசிகர்கள் மைதானத்தில் கூடியுள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இது குறித்து பேசிய ஸ்ரேயாஸ், நாங்கள் இறுதி போட்டியில் மனதளவிலும் உடலளவிலும் பாசிட்டிவாக இருக்கின்றோம். ரசிகர்கள் அதிக அளவு கூடி இருக்கிறார்கள். இந்த தருணத்தை நான் மகிழ்ச்சியுடன் என்றென்றும் மனதில் வைத்திருப்பேன். வீரர்கள் அனைவரும் நல்ல மனநிலையில் இருக்கிறார்கள். இந்த பெரிய நிகழ்வை அவர்கள் வெற்றிகரமாக கையாள்வார்கள் என்று நம்புகிறேன். ஒருநாள் இடைவெளியில் மீண்டும் விளையாடுவதால் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. நாங்கள் நன்றாக இருக்கின்றோம். இதை இறுதி போட்டிக்குள் தான் நாங்கள் விளையாடுவோம். நாங்கள் ஏற்கனவே கோப்பையை வென்று இருப்பது போல் மனதளவில் காட்சிகளை போட்டு பார்த்து கொண்டோம்.
இதையும் படிங்க: நாளை இறுதி போட்டி; என்னால் தூங்கவே முடியவில்லை... மனம் திறந்த ஸ்ரேயாஸ்!!

எங்கள் அணியில் இந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பேசிய ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார், எங்கள் அணியினர் எந்த மாற்றமும் இல்லை. ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. நாங்களும் டாஸ் வென்று இருந்தால் முதலில் பந்துவீச்சு தான் தேர்வு செய்திருப்போம். இதுவரை நாங்கள் அபாரமாக விளையாடி இருக்கிறோம். இந்த இறுதிப் போட்டியை இன்னொரு ஒரு ஆட்டமாக தான் நாங்கள் நினைப்போம். இறுதிப்போட்டியில் எங்களுடைய சிறந்த செயல்பாட்டை நாங்கள் தருவோம்.

இது நிச்சயம் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய மேடை அனைவரும் நன்றாக விளையாட இருக்கிறார்கள் என்றும் நன்றாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை ஆடுகளம் செம்மண் களிமண்ணும் கலந்த வகையில் இருக்கின்றது என்று தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணியில் டிம் டேவிட் காயம் காரணமாக இன்றைய ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக லிவிங்ஸ்டோன் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: இரண்டாம் தகுதி சுற்றுக்கு முன்னேறியது மும்பை அணி... 20 ரன் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி!!