2025 ஐபில் சீசனில் இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி நாளை மாலை 7:30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் குவாலிஃபயர் 2 ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியதால், போட்டி முடிவடைய நடு இரவு ஆகிவிட்டது.

இந்த நிலையில் பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு சென்ற நிலையில் தான் இரவு வெறும் 4 மணி நேரம் தான் தூங்கியதாக ஸ்ரேயாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நான் எனக்கான ஒரு மனதளவில் இருக்கிறேன் என்றால் அது போட்டிக்கு முன்பே தொடங்கி விடும். நான் எவ்வாறு பயிற்சி செய்கின்றேன். நான் எவ்வாறு அன்றைய ஆட்டத்திற்கு திட்டத்தை தீட்டுகிறேன்.
இதையும் படிங்க: இரண்டாம் தகுதி சுற்றுக்கு முன்னேறியது மும்பை அணி... 20 ரன் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி!!

அந்த போட்டியை எவ்வாறு நான் எதிர்கொள்கிறேன் என்பதை பொறுத்துதான் என் மனது அமையும். அதில் நான் செட் ஆகி விட்டேன் என்றால் நான் என் அணியை சிறப்பாக வழிநடத்துவேன் என்று எனக்கு நன்றாக தெரியும். எங்கள் அணியின் தொடக்க வீரர்கள் மற்றும் ஜோஷ் இங்கிலீஷ் ஆகியோர் அபாரமாக விளையாடினார்கள். போட்டி முடிவடைய தாமதமாகிவிட்டது.

இதனால் என்னால் தூங்கவே முடியவில்லை. நேற்று இரவு ஒரு நான்கு மணி நேரம் தான் நான் தூங்கி இருப்பேன் என்னுடைய அறைக்கு சென்ற போது தான் எனக்கு தெரிந்தது இறுதிப் போட்டிக்கான விஷயங்களில் நான் ஈடுபட வேண்டும் என்று அதன் ஒரு பகுதியாக தற்போது உங்களை சந்திக்க வந்திருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மும்பை அணியில் மூன்று மாற்றங்கள்... கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய தகவல்!!