2025 ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியும் பெங்களூர் அணியும் மோதின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் கோலி களமிறங்கினர். பில் சால்ட் 16 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் வந்த மயங்க் அகர்வால் 18 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

பின்னர் வந்த அணியின் கேப்டன் பட்டிதார் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் அபராமாக ஆடிய கோலி, 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் வந்த ஜிதேஷ் சர்மா அடுதடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார். மறுபுறம் லிவிங்ஸ்டன் 15 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை குவித்தது.
இதையும் படிங்க: கமல் இதை செஞ்சே ஆகனும்... கன்னடம் தமிழ் மொழி விவகாரத்தில் தமிழிசை வலியுறுத்தல்!!

191 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரராக விளையாடிய பிரியான்ஸ் ஆர்யா 4 பவுண்டரிகள் எடுத்த நிலையில் பில் சால்டின் அபார கேட்சால் 24 ரன்களில் ஆட்டம் இழந்தார். மறுபுறம் பிராப்சிம்ரன் சிங் 22 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க பஞ்சாப் அணிக்கு அது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

இதேபோன்று ஜோஸ் இங்கிலீஷில் நான்கு சிக்சர்களை பறக்கவிட்டு பஞ்சாப் அணியை கரை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் 23 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.இறுதியில் முதல் பந்தில் சிக்சர் அடித்த ஸ்டோனிஸ் , 2வது பந்தில் கேட்ச் ஆனார். நெஹல் வதேரா 18 ரன்களிலும், அஸ்மத்துல்லா 1 ரன்னிலும் ஆட்டமிழக்க பஞ்சாப் அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஆர்சிபி அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதையும் படிங்க: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கிய இறுதிபோட்டி... டாஸ் வென்றது பஞ்சாப் அணி; கோப்பை யாருக்கு?