5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் லீட்சில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலாவதாக பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவர்களில் 471 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் கில் (147 ரன்கள்), ஜெய்ஸ்வால் (101 ரன்கள்) மற்றும் ரிஷப் பண்ட் (134 ரன்கள்) சதம் விளாசினர். இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டாங்கு தலா 4 விக்கெட் சாய்த்தனர்.
இதையும் படிங்க: ஒரே இன்னிங்சில் நடந்த பல சம்பவங்கள்... தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!!
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது. இந்த சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை இங்கிலாந்து அணி 77 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் அடித்துள்ளது. ஹாரி புரூக் 57 ரன்களுடனும், ஜேமி சுமித் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி வீரர் ஆலி போப் 106 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களம் புகுந்த பென் ஸ்டோக்ஸ் 20 ரன்னில் முகமது சிராஜ் பந்தில் நடையை கட்டினார். ஆனால் மறுபக்கம் இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் சூப்பர் அரை சதம் விளாசினார். 3ம் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்துள்ளது. ஹாரி ப்ரூக் 77 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 57 ரன்களுடனும், ஜேமி ஸ்மித் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய ஆட்டம் தொடங்கிய 12-15 ஓவர்களிலேயே பந்தின் தன்மை மாறிவிட்டது. வேறு புதிய பந்தை தரும்படி நடுவர்களிடம் அடிக்கடி முறையிட்டனர். இருப்பினும் நடுவர்கள் இந்திய அணியினரின் கோரிக்கைகளை நிராகரித்தனர்.

ஒரு கட்டத்தில் இந்திய அணியின் துணை கேப்டனான ரிஷப் பண்ட் நடுவரிடம் நேரடியாக சென்று பந்தின் தன்மையை குறிப்பிட்டு காட்டி முறையிட்டார். ஆனாலும் நடுவர் அதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பண்ட் பந்தை கையில் கொடுக்காமல் வேகமாக தூக்கி எறிந்து விட்டு சென்றார். அவரின் செயலைக் கண்ட நடுவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் ரிஷப் பண்ட்டின் செய்கையால் கோபமடைந்த ரசிகர்கள் அவருக்கு எதிராக மைதானத்தில் கூச்சலிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஒரே இன்னிங்சில் நடந்த பல சம்பவங்கள்... தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!!