2025 ஐபிஎல் தொடரின் பிளேஆஃப் சுற்றில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, நாங்கள் முதலில் பேட்டிங் செய்யப் போகிறோம்.

நேற்று இருந்த பிட்ச்சை விட இது வேற மாதிரியாக இருக்கிறது. சற்று ஈரப்பதம் குறைவாக இருக்கிறது. இது பெரிய போட்டி என்பதால் அதிக ரன்கள் சேர்த்து விட்டு அதை தற்காத்து ஆடுவது நன்றாக இருக்கும். நாங்கள் கடைசி 9 போட்டிகளையும் நாக்கவுட் போட்டிகள் போலத்தான் ஆடி இருக்கிறோம். எனவே இப்போது எப்படி ஆட வேண்டும் என்ற விழிப்புணர்வு எங்களிடம் உள்ளது. எங்கள் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது RCB… அபார ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!!

ஜானி பேர்ஸ்டோ, ரிச்சர்ட் கிளீசன் ஆகியோர் விளையாடுகிறார்கள். ராஜ் அங்கத் பாவாவும் விளையாடுகிறார் என்று தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிட குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில், நாங்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்ய விரும்பினோம். எங்கள் வீரர்கள் மீண்டும் சண்டிகரில் விளையாடுவதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள்.

இது எனது சொந்த ஊர். இந்தப் போட்டி எந்த வகையிலும் எங்களுக்கு வித்தியாசமாக இருக்காது. எங்களுக்கு நாக்கவுட் போட்டி என்று அழுத்தமோ எதுவும் இல்லை. எங்கள் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. ஜோஸ் பட்லருக்கு பதிலாக குசல் மெண்டிஸ் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அர்ஷத் கானுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிஎஸ்கே அணியை நினைத்து ஒரு மூலையில் அமர்ந்து அழுகிறேன்... ரவிச்சந்திரன் அஷ்வின் உருக்கம்!!