தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து, இன்றளவும் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகை சினேகா.

தனது இயல்பான புன்னகை, குடும்பப் பாங்கான தோற்றம் மற்றும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பு ஆகியவற்றின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்.

குறிப்பாக, சினேகாவின் புன்னகைக்காகவே அவருக்கு ‘புன்னகை அரசி’ என்ற அடைமொழி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள சினேகா, தனது திரைப்பயணத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: வெறும் ரூ.50 ஆயிரத்தில் தொடங்கிய சூட்டிங்..!! ஆனா ரூ.2 கோடியாக உயர்ந்த ‘கஸ்தூரி வீடு’... சமுத்திரக்கனி சொன்ன அந்த வார்த்தைகள்.!

கதாநாயகியாக நடித்த காலகட்டத்தில் காதல், குடும்பம், நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான கதைகள் என பல்வேறு வகையான திரைப்படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்திய அவர், திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது சினிமாவில் நடிப்பதோடு மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் சினேகா.

அந்த வகையில், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். போட்டியாளர்களின் நடனத் திறமையை கவனித்து அவர்களுக்கு தனது கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வரும் சினேகா, தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: சூர்யா-ஜோதிகாவின் 20-வது ஆண்டு விழா..!! ‘கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார்களா.. பயில்வான் ரங்கநாதன் கிளப்பிய புதிய சர்ச்சை..!