சின்னத்திரையில் ஒரு கதாபாத்திரம் ரசிகர்களிடம் எந்த அளவுக்கு பிரபலமாகிறதோ, அதே அளவுக்கு அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உருவாகிவிடுகிறது.

அந்த வகையில், சன் டிவியில் ஒளிபரப்பான ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் தமிழக ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை மதுமிதா.

கன்னட திரையுலகில் இருந்து தமிழ் சின்னத்திரை பக்கம் வந்த இவர், தனது இயல்பான நடிப்பு மற்றும் திரையில் வெளிப்படுத்திய உணர்ச்சிகளின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இதையும் படிங்க: மஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் ‘புன்னகை அரசி’ சினேகா..!! வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

‘எதிர்நீச்சல்’ தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான மதுமிதா, அந்த தொடர் முடிவடைந்த பிறகும் சின்னத்திரையில் இருந்து விலகாமல் தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அய்யனார் துணை’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். புதிய தொடரிலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் மதுமிதா, மறுபுறம் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அவ்வப்போது தனது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அவர், தற்போது மலேசியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்துக்கொண்ட சில ஸ்டைலிஷான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: வெறும் ரூ.50 ஆயிரத்தில் தொடங்கிய சூட்டிங்..!! ஆனா ரூ.2 கோடியாக உயர்ந்த ‘கஸ்தூரி வீடு’... சமுத்திரக்கனி சொன்ன அந்த வார்த்தைகள்.!