தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் காமெடியனாக நடித்து வடிவேலுவையே பின்னுக்கு தள்ளியவர் தான் சந்தானம். இனி ஹீரோக்களுடன் இணைந்து எந்தவித காமெடி கதாபாத்திரங்களிலும் நடிக்க போவதில்லை என்று முடிவு செய்த இவர், தற்பொழுது காமெடி ஹீரோவாக மாறி பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரது ஆரம்ப வாழக்கை லொள்ளு சபாவில் தொடங்கியது.

இதனை அடுத்து அவரது நகைச்சுவை திறமைக்கு பலனாக எஸ்.டி.ஆரின் "காதல் அழிவதில்லை" என்ற படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார். ஆனால் அப்படம் பெரிதும் மக்கள் மத்தியில் பேசப்படவில்லை என்றாலும், 2004 ஆம் ஆண்டு சிம்புவின் 'மன்மதன்' திரைப்படத்தில் நடித்து தனது காமெடி கதாபாத்திரத்திற்கு என தனி இடத்தை உருவாக்கினார். அதற்கு பின் பல படங்களில் காமெடியனாக நடித்து இன்று சம்பளத்திலும் ரசிகர்களிலும் லட்சங்களை தாண்டி கோடிகளில் இருக்கிறார்.
இதையும் படிங்க: சந்தனத்தால் தான் எல்லாமே.. அவர் கூப்பிட்டதால இந்த படத்தில்..! ஷாக் கொடுத்த சிம்பு..!

இவரை போல், நடிகர் ஆர்யாவும், விஷ்ணுவர்த்தன் இயக்கிய "அறிந்தும் அறியாமலும்" என்ற திரைப்படத்தில் பிரகாஷ் ராஜிக்கு மகனாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து, மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடிகர் ஆர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சந்தானம். இந்த படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ஹாரர் மற்றும் காமெடி படமாக பார்க்கப்பட்ட இந்தப் படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, ‘லொள்ளு சபா’ மாறன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்களை கூறிவந்த நிலையில், சமீபத்தில் அதற்கான அறிவிப்பு வெளியானது.

அதன்படி, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்த இந்த படம் மே 16ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. இதனால் இப்படத்தை காண மக்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்த நிலையில், படத்தில் நடித்த நடிகர்களின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடிகை கஸ்தூரி , தேவகி & ஷில்பா முதலானோரின் அறிமுக போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: என் நண்பன்னு நினைத்தேன் ஆனால் என் வீட்டை இடிச்சிட்டான்..! ஆர்யாவை விளாசிய சந்தானம்..!