பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றம். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது.
இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் சமீப நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட இது போன்ற சம்பவங்கள் நீடிக்கின்றன.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்... "மக்கள் அச்சப்பட வேண்டாம்" - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற எட்டு வயது சிறுமியை கடத்திச் சென்று மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியை வன்கொடுமை செய்த நபர் யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: திருவண்ணாமலை ஏரியில் ரூ.8 கோடி மண் கொள்ளை? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது அதிரடி புகார்!