டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு பெரிய அளவிலான இளைஞர் எழுச்சியாக உருவெடுத்துள்ளது. 2026ஆம் ஆண்டு நீட் தேர்வில் ஏற்பட்ட கேள்விப்பட்டியல் கசிவு மற்றும் பிற தேர்வு ஒழுங்கீனங்கள் தொடர்பாக ஏற்பட்ட கோபம் இந்தப் போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஜூன் 6ஆம் தேதியிலிருந்து ஜந்தர் மந்தரில் தொடங்கிய இந்த அமைதியான போராட்டம், பின்னர் பெரிய அளவிலான மோதல்களுடன் தொடர்கிறது.
இந்தப் போராட்டத்தை முதன்மையாகத் தொடங்கியது 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' என்ற இளைஞர் அமைப்பு. டிஜிட்டல் தகவல் தொடர்பு வியூக நிபுணர் அபிஜீத் திப்கே இதைத் தொடங்கினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒரு கருத்து இந்த அமைப்பின் பெயருக்கும், சமூக ஊடகத்தில் பரவலான ஆதரவுக்கும் காரணமாக அமைந்தது. இந்த அமைப்பு விரைவில் தேர்வு சீர்திருத்தங்கள், கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைக் கோரி தெரு போராட்டங்களுக்கு மாறியது.
தற்போது டெல்லியில் போராட்டங்கள் வலுத்து வருகிறது. இந்த நிலையில், நீட் ரத்து தான் ஒரே தீர்வு என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புது தில்லியில் நடைபெறும் மாணவர்களின் போராட்டம் இப்போது நாடு முழுவதையும் ஈர்த்துள்ளது என கூறினார். நீட் தேர்வு முறையானது பெருமளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று எச்சரித்த முதல் இயக்கம் நாங்கள்தான் என்றார். அதனால்தான், இத்தேர்வு ஏற்படுத்தும் ஆபத்துகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி, ஆரம்பத்திலிருந்தே திமுக இதனை எதிர்த்து வருகிறது என கூறினார்.
இதையும் படிங்க: முதியவரை தாக்கிய தவெக நிர்வாகி..! காட்டுமிராண்டித் தனம்... விளாசிய வானதி சீனிவாசன்..!!
சமூக நீதியைக் காப்பதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாகவும், முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு வித்திட்டதாகவும் திகழும் தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கை நீட் தேர்வை ரத்து செய்வது என கூறியுள்ளார். மற்ற எந்தக் கோரிக்கைகளை விடவும், நீட் தேர்வை ரத்து செய்வதே இந்தப் போராட்டங்களின் மையப் பொருளாக அமைய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே இச்சிக்கல்கள் அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்றார்.
இதையும் படிங்க: "விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சும் தவெக அரசு"..! ஊழல் ஆட்சி..!!கொந்தளித்த திமுக..!!