வடக்கனந்தல் பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திரைப்பட நடிகை கௌதமி காலி நாற்காலிகளுடன் உரையாடிய பரிதாப காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
"கூட்டத்திற்கு வந்துவிட்டு வீட்டிற்கு திரும்பியவர்கள் மீது எனக்கு வருத்தம் இல்லை" என கூறி தனக்குத்தானே மனதை தேற்றிக்கொள்ளும் வகையில் மேடையிலேயே உரையாற்றினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் பகுதியில் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுரு மற்றும் முன்னாள் அமைச்சர் மோகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது...இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகை கௌதமி மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டு அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட பல்வேறு விதமான திட்டப்பணிகள் மற்றும் தற்போது அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நிறைவேற்றப்படுவதாக அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார்
இதையும் படிங்க: 45/25 அமித் ஷாவின் வில்லங்க கணக்கு... ஆடிப்போன எடப்பாடி பழனிசாமி... சீட் இழுபறியின் பரபர பின்னணி...!

இந்த நிலையில் இந்த பொதுக்கூட்டத்தில் திரைப்பட நடிகை கௌதமி பங்கேற்று சிறப்புரை ஆற்ற தொடங்கியவுடன் கூட்டத்தில் பங்கேற்ற ஏராளமானோர் புறப்பட தொடங்கிய நிலையில் சற்றும் மனம் தளராத திரைப்பட நடிகை கௌதமி காலி நாற்காலிகள் இடையே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் "நீங்கள் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா " என்ற கேள்வியை எழுப்பி காலி நாற்காலிகளிடம் கேள்வி எழுப்பினார்... மேலும் இந்த கூட்டம் தொடங்கிய போது இருந்த கூட்டத்தை விட தற்போது இருக்கும் கூட்டம் குறைவாக உள்ளது கூட்டத்திற்கு வந்துவிட்டு வீடு திரும்பியவர்கள் மீது எனக்கு வருத்தம் இல்லை அவர்கள் அனைவரும் உழைப்பாளிகள் அவர்களின் வலி எனக்கு தெரியும் எனக் கூறி தனக்குத்தானே தன் மனதை அவர் தேற்றி கொண்டார்.
இதையும் படிங்க: வெல்லமண்டி நடராஜனுக்கு புதிய பொறுப்பு... EPS எடுத்த அதிரடி முடிவு..!!