தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பரிசுப் பொருட்கள் வழங்குவது, பண பட்டுவாடா செய்வது ஆகியவற்றை தடுக்க தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பரிசுப் பொருட்கள் பணம் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் சில இடங்களில் பரிசு டோக்கன்கள், கூப்பன்கள், பண பட்டுவாடா ஆகியவை நிகழ்கின்றன. தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தகைய சம்பவங்கள் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பை இறுக்கமாக்கின. பணப் பரிவர்த்தனை, லஞ்சம், இலவசங்கள் வழங்குதல் போன்றவற்றைத் தடுக்க பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டன.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வேட்பாளராக களமிறங்கி இருப்பவர் இசக்கிமுத்து என்பவர். இவரது கட்சி அலுவலகம் நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் சீனிவாசன் நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது.
பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு இசக்கி முத்துவின் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் இருப்பதாக புகார்கள் வந்திருக்கிறது. அதன் அடிப்படையில் பாளையங்கோட்டை காவல்துறையினர் கேடிசி நகர் பகுதியில் உள்ள அந்த அலுவலகத்தில் உள்ளே சென்று ஆய்வு செய்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: நம் வாக்கு - நம் உரிமை! 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் வேண்டுகோள்!
அப்பொழுது முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.20,29,400 பணம் இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக காவல்துறையினர் வருமானவரித்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வருமானவரித்துறையினர் அங்கிருந்த பணத்தை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் முறையான ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளனர். முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத சூழ்நிலையால் வருமானவரித்துறையினரால் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: வாக்குச்சாவடிகளில் கண் கொத்தி பாம்பாக இருங்கள்! 234 தொகுதி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கட்டளை!