திருப்பத்தூர் அடுத்த நாற்றம்பள்ளி பகுதியில் அவ்வப்போது கரடிகளின் நடமாட்டம் தென்படுகிறது. வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறி அசால்ட்டாக ஊருக்குள் நுழையும் கரடி மற்றும் அதன் குட்டிகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடுவதுடன், சில சமயங்களில் மக்களையும் தாக்க முயற்சி செய்கிறது. இதனால் மக்களும் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வராமல், கரடிக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் சிறுவர்களும் விளையாட வெளியே செல்வதில்லை.

இந்நிலையில் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அருகே உள்ள செத்தமலை பகுதியில் இருந்து இரண்டு குட்டி கரடிகள் ஒரு தாய் கரடி என மூன்று கரடிகள் விவசாய நிலத்திற்குள் புகுந்துள்ளது. அப்போது அங்கு விவசாய நிலத்தில் பருத்தி எடுத்து கொண்டிருந்த மணிமேகலை என்ற பெண்ணை கடித்து குதறிவிட்டு அங்கிருக்கும் ஒரு வீட்டிற்குள் பதுங்கியது. கரடி கடியால் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அண்ணா பல்கலை. வழக்கு! சிபிஐக்கு மாற்ற அவசியமே இல்லை! டிஜிபி கொடுத்த விளக்கம்
கரடிகளின் அட்டகாசத்தால் அச்சத்தில் உறைந்திருக்கும் மக்கள், அதனை உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் கரடிகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.


சுற்றுச்சுவர் மீது ஏறிய கரடி திடீரென மீண்டும் கீழே குதித்து அங்கிருந்து தப்பியது. 2 குட்டி கரடிகளும் தப்பி காட்டிற்குள் ஓட, இதனையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, ஒருவழியாக தாய் கரடியை மட்டும் கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய இந்தியா... பகை நெருப்பில் கருகும் அரபு நாடுகள்..!