கோவை மாவட்டம் புறநகர் சூலூர் அருகே கரையாம்பாளையம் பகுதியில் பிளாக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பிளாக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில், விநாயகர் மற்றும் ராகு கேது சிலைகள் சிமெண்டால் செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வந்தது. கோயில் வளாகத்திற்கு கேட் இல்லை. மேலும் மின் வசதியோ சிசிடிவி கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை. இந்நிலையிலே, யாரோ அத்துமீறி கோவிலுக்குள் நுழைந்து கோவில் வளாகத்தில் இருந்த சிமெண்டால் செய்யப்பட்ட விநாயகர் சிலை மற்றும் ராகு கேது சிலைகளை அடித்து உடைத்துள்ளனர். அதன் பாகங்கள் அங்கேயே கிடந்த நிலையில் அந்த ஆசாமி தலைமறைவாகி விட்டார். ஊர் பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தந்தனர். அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் அங்கு கூடினர்.

தகவல் அறிந்த கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன் மற்றும் சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை சம்பவ இடத்திற்கு சென்று உடைந்து கீழே கிடந்து சிலைகளை பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது, கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்த போலீசார் சுற்றுப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து சிலையை உடைத்த குற்றவாளியைத் தேடி வருகின்றனர். நீலாம்பூர் முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முகம் (திமுக) மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கோபால்சாமி மாவட்ட பாஜக தலைவர் கருமாரி முத்து சூலூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அன்பரசு உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் சம்பவ இடத்திற்கு வந்து அடுத்த கட்ட நிகழ்வுகளை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க: கரூரில் காலையிலேயே பரபரப்பு... பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

போலீஸ் உடனடியாக இந்த சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ஊர் பொதுமக்கள் ஒற்றுமையாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் அந்த கோவில் வளாகத்திற்கு வந்தார். அவருடன் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர் வந்திருந்தனர். கோவில் சிலை உடைப்பு நிகழ்ச்சிகளை பார்வையிட்ட ஏ.பி.முருகானந்தம் போலீசார் உடன் சம்பவம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக அப்போதே மறியல் போராட்டம் செய்ய உள்ளதாகவும் மிகப்பெரிய அளவில் இந்த சிலை உடைப்பு விவகாரத்தை பெரிது படுத்த போவதாகவும் பேசினார். இதற்கு ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கள் ஊர் கோவில் பாதிக்கப்பட்டுள்ளது , சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது இதற்கான காரண காரியங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இதில் அரசியல் கட்சி தலையீடு வேண்டாம். ஆர்ப்பாட்டம், போராட்டம் , மறியல் என நீங்கள் ஆரம்பித்து வைத்து விட்டு சென்று விடுவீர்கள், பின்னர் நாங்கள் தான் ஊர் மக்கள் தான் போலீஸ் கேஸ் என அலைய வேண்டியவரும். ஆகவே வந்த வேலையை மட்டும் பார்த்துவிட்டு செல்லுங்கள் என கோரசாக பேசினர். தொடர்ந்து பேசிய முருகானந்தம் தங்கள் இயக்கத்திற்கு சாமி சிலைகளை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. நாங்கள் இந்த சம்பவத்தை சும்மா விடமாட்டோம் என பேசி மறியல் போராட்டத்திற்கு ஆள் திரட்டினார்.

இதை பார்த்த ஊர் பொதுமக்கள் தயவு செய்து நீங்கள் வந்த வேலையை பார்த்து சொல்லுங்கள் எங்கள் கோவில் பற்றி நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம் என ஒன்று கூடி வாக்குவாத்த்தில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் செய்வது தெரியாது ஏதும் அறிவிக்காமல் திரும்ப சென்றார். பாஜக மாநில பொதுச் செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .கோவில் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
வழக்கம்போல இந்த கோவிலும் மனநலம் பாதிக்கப்பட்ட நாய் தான் உடைத்தது என வழக்கை மூடாமல். நேர்மையாக விசாரணை நடத்தவும். @tnpoliceoffl pic.twitter.com/QR4okKaXe1
— Sanghi Prince 🚩 (@SanghiPrince) June 18, 2025
இதையும் படிங்க: கோவை கார் குண்டு வழக்கில் திடீர் திருப்பம்... அரபு கல்லூரியில் நடந்த சதித்திட்டம் அம்பலம் - என்.ஐ.ஏ.வால் 4 பேர் கைது!