சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் வருகையை முறையாகக் கண்காணிக்கும் வகையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் அனைவருக்கும் காலை மற்றும் மாலை வேளைகளில் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை மூலம் பணியில் முழு ஈடுபாட்டை உறுதி செய்யவும், ஒழுக்கத்தைப் பேணவும் தமிழக அரசு நோக்கம் கொண்டுள்ளது.
மாநகராட்சி ஆணையர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்துத் துறை ஊழியர்களும் பணியில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், நகரின் 993 பூங்காக்களும் முறையாகப் பராமரிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், வருகைப் பதிவை இன்னும் துல்லியமாக்கும் நோக்கில் பயோமெட்ரிக் அமைப்பை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சாதனங்கள் வாங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு வாரத்திற்குள் அல்லது ஜூன் முதல் இந்தத் திட்டம் முழுமையாக அமலுக்கு வரும் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.20 கோடியில் அதிநவீன வழிகாட்டிப் பலகைகள்..! சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்..!
இந்தப் புதிய முறையின் கீழ் மாநகராட்சியில் பணியாற்றும் 12,960 நிரந்தரப் பணியாளர்கள், 23,421 தற்காலிகப் பணியாளர்கள் உள்பட மொத்தம் 63,381 பேருக்கும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு கட்டாயமாக்கப்படும். ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் கணினி முறையிலான பயோமெட்ரிக் சாதனங்கள் நிறுவப்படும். குறிப்பாக, தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கைப்பேசி செயலி மூலம் வருகைப் பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் பணியாளர்கள் வெளியிடங்களில் பணியாற்றும் போது தங்கள் இருப்பிடத்தை (லொக்கேஷன்) அனுப்ப வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பணி ஒழுங்கை உறுதி செய்ய உதவும்.
இதையும் படிங்க: தேர்தல் தோல்வி நிரந்தரம் அல்ல! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்!!