இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் புதிய வடிவம் எடுத்து வருகின்றன. டிஜிட்டல் அரெஸ்ட், ஆன்லைன் வேலை வாய்ப்பு போன்றவற்றைத் தொடர்ந்து, இப்போது 'சிக்கன் ரோடு' (Chicken Road) என்ற பெயரில் ஒரு புதிய மோசடி கும்பல் மக்களை ஏமாற்றி வருகிறது. "குறைந்த இந்திய ரூபாயை முதலீடு செய்து, வெளிநாட்டு யூரோ கரன்சியில் அதிக லாபம் ஈட்டலாம்" என்று விளம்பரப்படுத்தி, ஆயிரக்கணக்கானோரை சிக்க வைத்துள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் 'சிக்கன் ரோடு' என்ற செயலி பிரபலப்படுத்தப்படுகிறது. ஒரு கோழி சாலை கடக்கும் எளிய விளையாட்டு போல தோன்றும் இது, குறைந்த தொகை (குறைந்தபட்சம் 3,000 ரூபாய்) செலுத்தி தொடங்கினால் யூரோவில் பெரும் லாபம் கிடைக்கும் என ஏமாற்றுகின்றனர்.
ஆனால் இந்த செயலி ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் தடை செய்யப்பட்டுள்ளது. அங்கீகாரம் இல்லாத APK ஐ பதிவிறக்கம் செய்யச் சொல்லி, மக்களை ஏமாற்றுகின்றனர்.
இதையும் படிங்க: 6 தொகுதிகளில் பிராமண வேட்பாளர்கள்!! நாதக புது கணக்கு! தமிழக அரசியலில் சீமான் இறக்கிய புது பார்முலா
சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கையாக கூறுவது: இந்த மோசடியில் பணம் செலுத்திய பிறகு சிறிது லாபம் காட்டி மேலும் முதலீடு செய்ய வைப்பார்கள். பின்னர் பணத்தை திரும்பப் பெற முயன்றால், கூடுதல் கட்டணம், வரி, சரிபார்ப்பு என்று தொடர்ந்து கேட்டு ஏமாற்றுவார்கள்.

இறுதியில் பணம் போய்விடும். மேலும், அங்கீகரிக்கப்படாத செயலி பதிவிறக்கம் செய்வதால் உங்கள் வங்கி விவரங்கள், OTP, தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது.
சமீப காலங்களில் இதுபோன்ற crash-style gambling apps போல 'சிக்கன் ரோடு' க்ளோன் செயலிகள் பல உருவாகியுள்ளன. சிலர் லட்சக்கணக்கில் இழந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. மத்திய அரசின் சைபர் கிரைம் போர்டல், போலீஸ் துறை ஆகியவை இதுபோன்ற மோசடிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால் புதிய பெயர்களில் மோசடி தொடர்கிறது.
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எந்த அங்கீகாரமற்ற ஆப்-இலும் பணம் முதலீடு செய்ய வேண்டாம். "எளிதில் பணம் சம்பாதிக்கலாம்" என்ற விளம்பரங்களை நம்ப வேண்டாம். மோசடி சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக cybercrime.gov.in அல்லது 1930 ஹெல்ப்லைனுக்கு புகார் அளிக்கவும். உங்கள் பணத்தையும், தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!
இதையும் படிங்க: நல்லக்கண்ணு உடன் இயற்கை போராடிக் கொண்டிருக்கிறது - சிபிஐ வீரபாண்டியன்..!!