உலகின் புகழ்பெற்ற செஸ் தொடர்களில் ஒன்றான நார்வே செஸ் 2026 தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ர. பிரக்ஞானந்தா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். இந்திய வீரர்களில் முதன்முறையாக இந்த பட்டத்தை கைப்பற்றிய அவர், தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இந்த சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தார்.
நார்வே செஸ் தொடர் மே 25 முதல் ஜூன் 5 வரை ஒஸ்லோவில் நடைபெற்றது. 10 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் பிரக்ஞானந்தா 18/30 புள்ளிகளுடன் சாம்பியனாக உயர்ந்தார். கடைசி சுற்றில் வின்சென்ட் கெய்மருக்கு எதிராக வெற்றி பெற்று பட்டத்தை உறுதி செய்தார். இந்த வெற்றியின் மூலம் அவர் நான்கு கிளாசிக்கல் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற சாதனையையும் படைத்தார்.

மிக முக்கியமான சாதனையாக, உலகின் நம்பர் 1 வீரரும் நார்வேயின் செஸ் லெஜண்டுமான மாக்னஸ் கார்ல்சனை ஒரே தொடரில் இரண்டு முறை தோற்கடித்துள்ளார். மூன்றாவது சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடனும், எட்டாவது சுற்றில் கருப்பு நிறக் காய்களுடனும் அவரை வீழ்த்தியது உலக செஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு தொடரில் கார்ல்சனை இருமுறை கிளாசிக்கல் ஆட்டத்தில் தோற்கடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் பிரக்ஞானந்தாவுக்குக் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: உங்க கொத்தடிமை கூட்டமே உங்களுக்கு ஃபுல்ஸ்டாப் வைக்கும்..!! ஸ்டாலினை விளாசிய தவெக..!!
இந்த நிலையில், பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், முதல்வர் விஜய் நேரில் சந்தித்து கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா வாழ்த்து பெற்றார். வரலாற்று சாதனை படைத்த பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: நார்வே செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா..! கார்ல்சனை இருமுறை வீழ்த்தி சாதனை..! முதல்வர் விஜய் வாழ்த்து..!!