கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சி அவரது நினைவை போற்றி புகழாரம் சூட்டியிருக்கிறது. கலைஞர் கருணாநிதி ஜூன் 3, 1924 அன்று பிறந்தார். அவரது பிறந்த நாள் தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் வரலாற்றில் முக்கிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அவரது தலைமையில் தமிழ்நாடு பல்வேறு சமூக நலத் திட்டங்கள், கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் தமிழ் பண்பாட்டு வளர்ச்சியைப் பெற்றது. அவரது 103ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் உட்பட பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தமிழ்நாட்டின் அரசியல், இலக்கியம் மற்றும் சமூக நீதி வரலாற்றில் இன்று ஒரு முக்கிய நாளாகப் பதிவாகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமா உலகில் இருந்து அரசியல் களத்திற்கு வந்து, திராவிட இயக்கத்தின் முன்னோடியாகவும், தமிழ்நாட்டின் நவீன சிற்பியாகவும் உருவெடுத்தவர். அவரது நினைவு தமிழக அரசியலில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.
இதையும் படிங்க: அய்யய்யோ என்ன இப்படி பண்ணிட்டாரு?... ஆதவை அப்செட் ஆக்கிய காங்கிரஸ் எம்.பி கிறிஸ்டோபர் திலக்...!
கலைஞர் கருணாநிதி சமூகநீதியின் பாதுகாவலர் என காங்கிரஸ் கட்சி புகழாரம் சூட்டியுள்ளது. தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவரும், சிறந்த எழுத்தாளரும், சமூக நீதியின் பாதுகாவலருமான மு.கருணாநிதியை அவரது பிறந்தநாளில் நினைவுகூருகிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது. சமத்துவம், கல்வி மற்றும் பொது நலனுக்கான அவரது அர்ப்பணிப்பு, இந்தியா முழுவதும் உள்ள தலைமுறையினருக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!