சிவகாசி அருகே சித்துராஜபுரத்தில் தெற்கு மற்றும் கிழக்கு ஒன்றியங்களின் பொது உறுப்பினர்களின் கூட்டம் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: திமுகவின் ரத்த நாளங்களாகவும், வலிவும், பொலிவும் சேர்த்தவர்களாகவும் பொது உறுப்பினர்கள் உள்ளனர். திமுக தலைமையிலான தமிழக அரசாட்சியில் ஏதேனும் ஒரு திட்டத்தின் மூலமாக பயன்பெறாத குடும்பமே கிடையாது.

தமிழ் புதல்வன் திட்டம், மகளிர் உரிமைத் தொகை விடியல் பயணம் என பல்வேறு நலத் திட்டங்களை அள்ளி அள்ளி கொடுத்து செயல்படுத்தி வருவதால் பயன்பெறாதவர்களே இல்லை.

இதையும் படிங்க: நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!
திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடையே எடுத்துச் சொல்லி வருகிற 1-ம் தேதி முதல் 40 நாட்கள் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறுவதை நாம் திருவிழா போல் நம் வீட்டு விசேஷம் போல் கொண்டாட வேண்டும். தற்போதுள்ள கோடிக்கணக்கான தொண்டர்களுடன் உள்ள திமுக உறுப்பினர்களோடு மேலும்30 சதவீதத்தினரை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். வருகிற 2026-ம் ஆண்டு தேர்தல் மட்டுமல்ல எப்போதும் நம் ஆட்சியான திராவிடமாடல் ஆட்சி தான் தமிழகத்தில் தொடருமென்றார்.

அதனைத் தொடர்ந்து ஓரணியில் தமிழ்நாடு என்பது குறித்த அலைபேசி மூலமான செயலி பற்றிய விளக்கவுரை கணினி வாயிலாக அனைவரும் எளிதில் அறிந்து, புரிந்துகொள்ளும் விதமாக வெண் திரையில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
இதையும் படிங்க: இதற்கு ஈபிஎஸ் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும்... திருமாவளவன் கேட்ட நெத்தியடி கேள்வி!!