கூட்டணி ஆட்சி குறித்து முதலமைச்சர் தெளிவுபடுத்தியுள்ள நிலையில் தனிநபர் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது. ராகுல் காந்தி கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிக்கப்படும். செங்குன்றத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பங்கேற்ற ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் இன்று போராட்டங்கள் நடைபெற்றன. காலையில் ரயில் மறியல், முற்றுகை போராட்டங்கள் நடைபெற்றன. மாலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர். நிதி இல்லை 100 நாள் வேலை இல்லை, மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக மற்றும் அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்து, ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதியிடம் 1 வாரத்தில் டிஜிபி நியமனம் குறித்து நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்த கேள்விக்கு, நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். அமித்ஷா, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் அடுத்தடுத்து தமிழ்நாட்டிற்கு வர உள்ளது குறித்த கேள்விக்கு, கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது மோடி 8 முறை வந்தும் பலனளிக்கவில்லை எனவும், அதனால் அவர்களின் வருகையை குறித்து திமுகவிற்கு கவலையில்லை என்றார்.
இதையும் படிங்க: பங்கு கேட்டா சதினு சொல்லுவீங்களா? முதல்வருக்கு காங்., எம்.பி கேள்வி?! திமுக - காங்., இடையே முற்றும் மோதல்!
மாணிக்கம் தாகூர் பதிவு குறித்த கேள்விக்கு, கூட்டணி ஆட்சி குறித்து முதலமைச்சர் தெளிவுபடுத்தியுள்ள நிலையில் தனிநபர் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது எனவும், ராகுல் காந்தி கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிக்கப்படும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
இதையும் படிங்க: காங்., தலைமையில் கூட்டணி!! திமுகவுக்கு அதிர்ச்சி! யார் பெரிய கட்சி?! புதுச்சேரியில் கூட்டணிக்குள் சலசலப்பு!