அதிமுகவிலிருந்து அரசியல் சுய நலத்திற்காக செம்மலை வெளியே போனது ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. 90% பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடமே உள்ளனர்.எஸ் பி வேலுமணி தரப்பினர் எதிர்பார்க்கும் மாற்றம் அதிமுகவில் நிறைவேறாது. ஆட்சியரை சந்தித்த பின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தகவல்.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், அதிமுக கொறடாவாக அறிவிக்கப்பட்டுள்ள அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இன்று
கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் 7 ஆரணி சட்டமன்ற உறுப்பினர் ஜெயசுதா செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் முக்கு சுப்பிரமணியன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் இன்று மாவட்ட ஆட்சியரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தும் பொன்னாடை கொடுத்தும் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர்.
இதையும் படிங்க: எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? - செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...!
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அக்ரி எஸ்எஸ் கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலை மாவட்டம் அதிமுகவின் கோட்டை அது தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு முழுக்க அனைத்து அதிமுகவினரும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிமுகவிலிருந்து தற்போது செம்மலை விலகி இருப்பதாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தவர். அவர் அதிமுகவை விட்டு வெளியே சென்றதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்றும் அரசியல் தேவைக்காக வெளியே செல்பவர்கள் என்ன காரணத்திற்காக செல்கிறார்கள் என்று கூறுவதில்லை அது போல் செம்மலை சுயநலத்திற்காக அரசியலை விட்டு வெளியே சென்றுள்ளார் என்றும் அவர் கூறினார்.
தமிழகம் முழுக்க 90 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடம் உள்ளதாகவும் தவறான புள்ளி விவரங்களை எஸ்.பி.வேலுமணி தரப்பினர் தெரிவித்து வருவதாகவும், மக்களை குழப்புவதற்காகவும் கழக நிர்வாகிகளிடம் மாற்றத்தை உருவாக்க நினைக்கிறார்கள் என்றும் கூறியவர் அவர்கள் எதிர்பார்க்கின்ற மாற்றம் அதிமுகவில் நடைபெறாது என திட்டவட்டமாக கூறினார்.
இதையும் படிங்க: ஆஹா...!! - என்ன ஒரு நூதன போராட்டம்... சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பாராத அயிட்டங்களை அனுப்பி வைத்த அதிமுகவினர்...!