ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. என். இளையராஜா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், தன்னை ஒரு நபர் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகக் கூறினார். பிறகு திருநாவுக்கரசு என அடையாளம் காணப்பட்டார். திருநாவுக்கரசு இளையராஜாவிடம், “முக்கிய கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களிடம் பேசச் சொன்னார்கள்” என்று தொடங்கி, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சபாநாயகருக்கு எதிராக வாக்களித்தால் அல்லது ராஜினாமா செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பேரத்தில் ரூ.35 கோடி வரை வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாகவும், மிரட்டல் கலந்த முயற்சிகளும் இருந்ததாகவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார். போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். இந்த விவகாரத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கைதானவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

செந்தில் பாலாஜிக்கு போலீஸ் தரப்பில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் ஸ்ரீவைகுண்டம் எம் எல் ஏ சரவணன் குதிரை பேரம் நடத்தியது தொடர்பாக ஆதாரங்களை வெளியிட்டார். குதிரை பேரம் நடத்தியது தொடர்பான ஆடியோவை வெளியிட்டவுடன் பேசியவரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: யாரு வற்புறுத்தினாங்க..? எதாச்சு சொல்லின்னு இருக்காதீங்க..! Ex. அமைச்சர் பேச்சுக்கு செங்கோட்டையன் COUNTER..!!
இந்த விவகாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குதிரை பேரம் தொடர்பாக மறுப்பு தெரிவித்துள்ளார். நான் லாட்டரி வியாபாரம் செய்யவில்லை என்றும் கஞ்சா வியாபாரம் செய்யவில்லை என்றும் தெரிவித்தார். நீங்கள் வேண்டுமானால் எனக்கு 50 கோடி ரூபாய் வாங்கித் தாருங்கள் என கிண்டலாக பேசினார்.
இதையும் படிங்க: தவம் இருந்தாலும் தவெக-வில் அனிதாவுக்கு இடமில்லை! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!