கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட்ட 26.4 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் கோவை க.க.சாவடி பகுதியில் காவல்துறையினரின் வாகன தணிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது.இரு சக்கர வாகனத்தில் பணம் கடத்திய இருவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் -கொச்சி தேசிய நெடுஞ்சாலை கோவை க.க.சாவடி அடுத்த எல்லை மாகாளியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள காவல் துறை சோதனை சாவடி பகுதியில் இன்று காலை மதுக்கரை நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட நிலையில் கோவையிலிருந்து கேரளாவிற்கு இருசக்கர வாகனம் மூலம் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்துள்ளது.
இதை அடுத்து கேரளா நோக்கிச் சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் எந்தவித ஆவணங்களும் இன்றி 26 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கவரிங் வளையல்கள் ஆகியவை கொண்டு கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கோவையில் ஒரு குன்றத்தூர் அபிராமி... கள்ள உறவுக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்...!
இதை அடுத்து அவற்றை கொண்டு சென்றவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த அப்துல் ஹக்கீம் மற்றும் அப்துல் ரகுமான் என தெரிய வந்தது.மேலும் பணம் குறித்த உரிய தகவல்களை கூறாமல் முன்னுக்கு பின் முரணாக அவர்கள் பதில் அளித்ததால் இருவரையும் க.க.சாவடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.....
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு சலுகை காட்டும் ட்ரம்ப்.. 29-ல் இருந்து 19%-ஆக குறைந்த வரி..