திருமணத்திற்கு பிறகு நடிகைகளின் சினிமா வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற பழைய கருத்தை உடைத்து, இன்றைய தலைமுறை நடிகைகள் தொடர்ந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருவதுடன், பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில், அவர் ஒரு சிறப்பு குத்துப்பாடலுக்கு நடனமாட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தனது நடிப்பு திறமை மற்றும் கதாபாத்திரத் தேர்வுகளால் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். குறிப்பாக, அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகையாக அறியப்படும் அவர், வணிக ரீதியான திரைப்படங்களிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
கடந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. அந்தப் படத்தைத் தொடர்ந்து, தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனால், தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: உண்மையாகவே அரசியலுக்கு வந்துடுவாரோ..!! படித்த பள்ளிக்கு அன்புப் பரிசு கொடுத்த தனுஷ்.. அதுவும் கோடிகளில்..!
தற்போது அவர் கைவசம் பல முக்கிய திரைப்படங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் ‘கண்ணிவெடி’, மலையாளத்தில் ‘தோட்டம்’, தெலுங்கில் ‘ரௌடி ஜனார்தனா’, ‘சத்யமணி சாவித்திரி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், இந்தி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வரும் அவர், தென்னிந்தியாவைத் தாண்டி தேசிய அளவில் தனது மார்க்கெட்டை விரிவுபடுத்தி வருகிறார்.

இவ்வளவு திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் நிலையில், கீர்த்தி சுரேஷ் திடீரென ஒரு குத்துப்பாடலில் நடனமாட இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. பொதுவாக முன்னணி நடிகைகள் சிறப்பு பாடல்களில் தோன்றுவது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வழக்கமான ஒன்றாக இருந்தாலும், கதாநாயகியாக பல படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இப்படிப்பட்ட ஒரு பாடலில் தோன்றுவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தி பாரடைஸ்’. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் மாஸ் மற்றும் வணிக ரீதியான அம்சங்களை அதிகரிக்கும் வகையில் இந்த பாடல் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளியானதும், ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. "இவ்வளவு படங்களில் கதாநாயகியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் ஏன் திடீரென ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாட வேண்டும்?" என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், முன்னணி நடிகைகள் சிறப்பு பாடல்களில் தோன்றுவது தற்போது ஒரு புதிய டிரெண்டாக மாறிவிட்டதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்பு நடிகை சமந்தா, அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா... ஊஹூ சொல்றியா மாமா’ என்ற பாடலில் நடனமாடி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். அந்த பாடல் வெளியானபோது இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன், சமந்தாவின் திரைப்பயணத்திலும் முக்கியமான ஒரு தருணமாக அமைந்தது.

அதேபோன்ற ஒரு வெற்றிகரமான முயற்சியை தற்போது கீர்த்தி சுரேஷும் மேற்கொள்ள உள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக, முன்னணி நடிகைகளின் ஸ்பெஷல் பாடல்கள் திரைப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிப்பதுடன், சமூக வலைதளங்களில் அதிக கவனத்தையும் பெற்றுவரும் நிலையில், ‘தி பாரடைஸ்’ படத்தில் கீர்த்தியின் பாடலும் பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒரு பாடலுக்காக கீர்த்தி சுரேஷுக்கு சுமார் ரூ.1.5 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு பாடலுக்கே இவ்வளவு பெரிய தொகையா என்ற ஆச்சரியம் திரையுலகில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த சம்பளம் தொடர்பான தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. இதுகுறித்து ‘தி பாரடைஸ்’ படக்குழுவினரிடம் கேட்டபோது, கீர்த்தி சுரேஷ் படத்தில் ஒரு சிறப்பு பாடலில் நடனமாடுவது உண்மைதான் என்றும், ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல்கள் தங்களுக்கு தெரியாது என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
‘தி பாரடைஸ்’ திரைப்படம் நானி நடிப்பில் உருவாகி வரும் மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்ஷன் மற்றும் மாஸ் அம்சங்களுடன் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், கீர்த்தி சுரேஷின் சிறப்பு பாடல் திரைப்படத்தின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக இருக்கும் என படக்குழு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமாவில் ஒரு காலத்தில் கதாநாயகிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது சிறப்பு பாடல்களும் திரைப்படத்தின் வணிக வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. முன்னணி நடிகைகள் தங்களது இமேஜை கருத்தில் கொண்டு இதுபோன்ற பாடல்களில் தோன்றும் முடிவுகளை எடுத்து வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷின் இந்த புதிய முயற்சி ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், தற்போது அவர் இடம்பெற உள்ளதாக கூறப்படும் ‘தி பாரடைஸ்’ படத்தின் குத்துப்பாடல், படம் வெளியாகும் முன்பே திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எனக்கு எடை குறையல.. ஆனால் வாழ்க்கை மாறிவிட்டது..! உடற்பயிற்சி பயணத்தை குறித்து பகிர்ந்த அஞ்சனா ரங்கன்..!