ஆந்திராவில் 40 வயதான பெண் ஒருவர் தனது 18 வயது மருமகனுடன் கள்ள தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. தனிமையில் உல்லாசமாக இருந்ததை பார்த்து மகள் கண்டித்த நிலையில் அவரை அந்த பெண்ணின் தாயும், கணவனும் சேர்ந்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதற்குள் அக்கம் பக்கத்தினர் வந்து தடுத்த நிலையில் மாமியாரையும் மருமகனையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கே.வி.பி.புரம் மண்டலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் அதே பகுதியில் வசித்து வந்துள்ளனர். இவர்களுடன் கணவனை இழந்த சிறுமியின் 40 வயது தாயாரும் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மாமியாருக்கும் மருமகனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. சிறுமி வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் இருந்ததாகவும், இதனை அறிந்த சிறுமி தனது கணவர் மற்றும் தாயாரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை விட்டதாக தெரியவில்லை. மேலும் மாமியார் தனது மருமகனை திருமணம் செய்ய முடிவு செய்ததாக தெரிகிறது. இதனை அந்த சிறுமி தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த அவரது தாயும் கணவரும் அவரை கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கல்குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.. மக்களுக்காக நின்ற ஆர்.பி உதயகுமார் கைது..!!
அலறல் சத்தம் கேட்டு உடனடியாக வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமையை மீட்டு உள்ளனர். மேலும் மாமியார் மற்றும் மருமகனை சரமாரியாக தாக்கி, காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING: கரூர் சம்பவத்தின் A1 அதிரடி கைது … சாட்டையை சுழற்றும் போலீஸ்...!