இந்தியா, பாகிஸ்தான் இடையே வெடித்த போர் மொத்த உலகத்தையும் உலுக்கியது. காரணம் இரு நாடுகளுமே அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகள். இப்படி நாடுகளின் சக்தியை காட்டுவதில் பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுத திறனும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இப்படியொரு பரபரப்பான சூழலில் எந்த நாட்டிடம் எவ்வளவு அணு ஆயுதம் இருக்கிறது; 2024க்கும் 2025க்கும் இடையே எவ்வளவு புதிய ஆயுதங்களை நாடுகள் தயாரித்து இருக்கின்றன என்ற விவரத்தை (Stockholm International Peace Research Institute )என்ற நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

சர்வதேச அளவில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், பாகிஸ்தான், வடகொரியா, இஸ்ரேல் ஆகிய 9 நாடுகளிடம் மட்டுமே அணு ஆயுதங்கள் இருக்கின்றன. 2025 சர்வே படி அதிகபட்சமாக ரஷ்யாவிடம் 5459, அமெரிக்காவிடம் 5177, சீனாவிடம் 600, பிரான்சிடம் 290, பிரிட்டனிடம் 225, இந்தியாவிடம் 180, பாகிஸ்தானிடம் 170, இஸ்ரேலிடம் 90, வடகொரியாவிடம் 50 அணு ஆயுதங்கள் உள்ளன.
இதையும் படிங்க: ட்ரம்புடன் பாக்., ராணுவ தளபதி ரகசிய சந்திப்பு..! இந்தியாவுக்கு எதிராக சதியா? ஈரானுக்கு வைக்கபோகும் ஆப்பா?
இந்தியாவை பொறுத்தவரை, பாகிஸ்தானும், சீனாவும் நமக்கு முக்கிய போட்டியாளர்கள். பாகிஸ்தானை பொறுத்தவரை கடந்த ஆண்டு 170 அணு ஆயுதம் வைத்திருந்தது. இப்போது ஒன்று கூட அதிகரிக்கவில்லை. அதே 170 தான் பாகிஸ்தானிடம் இருக்கிறது. இதுவே கடந்த ஆண்டு இந்தியாவிடம் 172 அணு ஆயுதங்கள் மட்டுமே இருந்தன. பாகிஸ்தானை விட 2 மட்டுமே கூடுதல். ஆனால் இப்போது நம்மிடம் 180 அணு ஆயுதம் வந்து விட்டது. ஒரே ஆண்டில் நாம் 8 அணு ஆயுதங்களை தயாரித்து இருக்கிறோம்.

இது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. காரணம், இந்தியா, பாகிஸ்தான் இடையே சமீபத்தில் மிகப்பெரிய போர் வெடித்தது. போரின் துவக்கத்தில் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை வைத்து மிரட்டியது. அணு ஆயுதம் தொடர்பான கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. உலக நாடுகளிடம் எதிர்ப்பு வந்ததால் பின்வாங்கி விட்டது. அணு ஆயுதம் பற்றி நாங்கள் பேசவே இல்லை என்று பல்டி அடித்து விட்டது. இந்தியாவை பொறுத்தவரை எதிரி நாடு நம் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்தும் வரை, நாம் அந்த நாட்டை அணு ஆயுதம் கொண்டு தாக்க மாட்டோம்.
ஆனால் பாகிஸ்தான் அப்படிப்பட்ட நாடு அல்ல. எனவே அந்த நாட்டை விட எப்போதும் அணு ஆயுத சக்தியில் இந்தியா விஞ்சி நிற்பது இன்றியமையாதது. இது இந்தியா மீதான பயத்தை பாகிஸ்தானுக்கு இயல்பிலேயே கொண்டு வந்து விடும். அந்த வகையில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. ஒரு வருடத்தில் ஒரு அணு ஆயுதத்தை கூட பாகிஸ்தானால் கூட்ட முடியவில்லை. இந்தியா 8 ஆயுதங்களை அதிகரித்து இருக்கிறது.

அதே நேரம் இந்தியா நெருங்கி வர முடியாத அளவு சீனா அணு ஆயுத தயாரிப்பில் வேகம் காட்டி வருகிறது. கடந்த ஆண்டு சீனாவிடம் 500 அணு ஆயுதங்கள் தான் இருந்தன. ஆனால் ஒரே ஆண்டில் அந்த நாடு 100 ஆயுதங்களை தயாரித்து இருக்கிறது. இந்தியாவை காட்டிலும் 3 மடங்குக்கும் அதிகமான ஆயுதங்கள் சீனா வசம் இருக்கின்றன.இந்தியா தொடர்ந்து அணு சக்தியை மேம்படுத்துவதில் பெரிய அளவில் முன்னேறி வருகிறது.
இதையும் படிங்க: ஆபரேசன் சிந்தூர் இன்னும் முடியல..! பாக்., விஷயத்துல தலையிடாதீங்க.! ட்ரம்பிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய மோடி..!