விஜய் முதலமைச்சராக காங்கிரஸ் உதவி செய்தது போல் விஜய் பிரதமராக காங்கிரஸ் கட்சி ஒத்துழைக்குமா என்ற கேள்விக்கு - நாங்களே இந்தியாவின் சிறந்த பிரதமர் வேட்பாளரை வைத்துள்ளோம். 12 வருடமாக போராடிய ராகுல்காந்தியை தான் மக்கள் பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள். அந்த நிலைப்பாட்டில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது - கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேட்டி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளை இன்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து வேடசந்தூரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, அரசு பள்ளிகளில் நவீன கற்பித்தல் முறையை ஏற்படுத்தும் வகையில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளில் 160 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜார்க்கண்ட் மாணவர் போராட்டத்தில் ராகுல் ஓட்டம்! பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண்சுக் ஆவேசம்!
தங்கம்மாப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட செயல் வன்முறையான செயல்பாடு என்றும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
ஒரு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் எந்த பதவிக்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்.. எல்லாரும் பிரதமராக ஆசைப்படலாம், ஜெயலலிதா கூட சொன்னார்.. லேடியா மோடியா என்று? ஆனால் அதுபோல் நடக்கவில்லை..
ஆனால் இன்று இந்தியாவில் நரேந்திர மோடியின் ஆட்சியை வீழ்த்தக்கூடிய வல்லமை மிக்க தலைவர் ராகுல் காந்தி மட்டுமே. 12 வருடங்களாக பாராளுமன்றத்தில் ஒரு யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.
மக்களையில் அவர் எழுந்தாலே பாஜக கட்சி பயப்படும் சூழ்நிலை இருக்கிறது. இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு மத்தியில் சென்று போராடிய ஒரே தலைவராக அவர்தான் இருக்கிறார்.
அதனால் 2029-ல் ராகுல் காந்தி தான் பிரதம வேட்பாளராக இருப்பார். தவெக சார்பில் பிரதமர் வேட்பாளர் குறித்து தெரிவிப்பது ஜனநாயக உரிமை என்றும், அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி தனது பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி தான் என்பது குறித்து தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாகவும், கூறினார்.
காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP)-யின் நிறுவனர் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் டிப்கே சிறந்த முதல்வர் M.K ஸ்டாலின் என்று கூறுவது ஒரு கருத்தின் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சியில் மு.க ஸ்டாலின், சிறந்த கல்விக்கான பணிகளை அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சிறந்த சுகாதாரத்திற்கான பணிகளை பினராய் விஜயன் அவர்களையும் பிஜேபி தலைவர் சொல்லியிருக்கிறார்.
அது அவருடைய தனிப்பட்ட கருத்து எனக்குத் தெரிந்து மிகச்சிறந்த முதலமைச்சர்களும் சிலர் இருக்கிறார்கள். அதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு முதல்வர் கூட அவர் கண்ணுக்கு தெரியவில்லை. அது அவருடைய கருத்து அந்தக் கருத்தில் சில இடங்களில் உண்மையும் இருக்கலாம். அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் வசதியானவர்கள் கிடையாது. அதனால் அவர்களுக்கு கார் வழங்குவதில் தவறில்லை.
சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சில அடிப்படை விஷயங்களை அரசாங்கம் செய்வதில் தவறு ஏதும் இல்லை. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலக வசதி கூட இல்லை என்றும் கூறினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகம் அமைத்துத் தர வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் ஜோதிமணி தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமித் ஷா உடனே பதவி விலக வேண்டும்! ஜந்தர் மந்தர் விவகாரத்தில் ராகுல் காந்தி ஆவேசம்!