• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காஞ்சிபுரம் ஏடிஎம் கொள்ளையில் அதிரடி திருப்பம்... ராஜஸ்தான் வரை சென்று வடமாநில இளைஞரை தூக்கிய தமிழக போலீஸ்...!

    சோமங்கலம் ஏடிஎம் கொள்ளை வழக்கில் வடமாநில இளைஞர் கைது
    Author By Amaravathi Tue, 01 Sep 2026 14:08:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kanchipuram ATM Theft Arrest

    கடந்த மாதம் 25-ம் தேதி நள்ளிரவில், படப்பையை அடுத்த சோமங்கலம் சாலையில் உள்ள ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, அதிலிருந்த சுமார் 9 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.

    இந்த சம்பவம் தொடர்பாக சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, முகமூடி அணிந்த ஒருவர் கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து, போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இதே கொள்ளைக் கும்பல் அடுத்தடுத்து மேலும் மூன்று சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    இதையும் படிங்க: #BREAKING கஜானாவில் காசில்லை... திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் அதிரடி ரத்து... தவெக அரசு தடாலடி முடிவு...!

    குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தையும் உடைத்து, அதிலிருந்து சுமார் 12 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மற்றொரு ஏடிஎம் மையத்தையும் குறிவைத்தபோது, ஆள் நடமாட்டத்தை உணர்ந்த கொள்ளைக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த மூன்று கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல்தான் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

    சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தியபோது, இந்த கொள்ளைக் கும்பல் லாரி மூலம் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று அந்த லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து, ஹரியானா, சத்தீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஹரியானாவில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்றபோது, பவன் குமார் என்பவர் ஏற்கனவே வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    வைசாலி நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ஜெய்ப்பூர் போலீசாரால் பவன் குமார் கைது செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து, சோமங்கலம் தனிப்படை போலீசார் அவரை இந்த வழக்கில் தற்போது முறையாகக் கைது செய்துள்ளனர்.

    இந்த கொள்ளை வழக்கில் மொத்தம் 5 பேர் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்களில் 4 பேருடன் சேர்ந்து பவன் குமாரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது பவன் குமாரை முறையாகக் கைது செய்துள்ள போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், தலைமறைவாக உள்ள மற்ற நான்கு பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

    இந்தக் கொள்ளைக் கும்பல் மீது பல்வேறு மாநிலங்களில் இதே பாணியில் கொள்ளையடித்த வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரே பாணியில், கேஸ் கட்டரைப் பயன்படுத்தி, முகமூடி அணிந்து ஏடிஎம் மையங்களுக்குள் சென்று இயந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையடிப்பது இவர்களின் வழக்கமாக இருந்துள்ளது. கொள்ளை சம்பவங்களுக்குப் பயன்படுத்திய வாகனங்களையும் அடிக்கடி மாற்றி வந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதேபோல், பல்வேறு மாநில போலீசாரும் இந்தக் கும்பலைத் தேடி வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள நான்கு பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

    மேலும், இவர்கள் மூன்று ஏடிஎம் மையங்களில் மட்டுமே கைவரிசை காட்டியுள்ளார்களா அல்லது வேறு ஏதேனும் ஏடிஎம் மையங்களில் இதேபோன்று கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார்களா என்பது, கைது செய்யப்பட்ட பவன் குமாரிடம் நடத்தப்படும் விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் பயங்கரம்... எமனாக மாறிய கிரிக்கெட் பந்து... 11 வயது சிறுவன் துடிதுடித்து பலி...!

    மேலும் படிங்க
    மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி கவிழும்! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

    மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி கவிழும்! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    பருவமழை ஆலோசனை கூட்டத்திற்கு திமுக கவுன்சிலர்கள் வராதது வருத்தம்! அமைச்சர் மரிய வில்சன் பேட்டி!

    பருவமழை ஆலோசனை கூட்டத்திற்கு திமுக கவுன்சிலர்கள் வராதது வருத்தம்! அமைச்சர் மரிய வில்சன் பேட்டி!

    தமிழ்நாடு
    பயிர்க் கடன் தள்ளுபடி செய்யாத தவெகவுக்கு எதிர்ப்பு! இடைத்தேர்தலில் பிரச்சாரம் என விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

    பயிர்க் கடன் தள்ளுபடி செய்யாத தவெகவுக்கு எதிர்ப்பு! இடைத்தேர்தலில் பிரச்சாரம் என விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தீவிரமடையும் போர்ச் சூழல்... 101 டாலரை தாண்டிய கச்சா எண்ணெய் விலை..! மேலும் உயரும் அபாயம்..!!

    தீவிரமடையும் போர்ச் சூழல்... 101 டாலரை தாண்டிய கச்சா எண்ணெய் விலை..! மேலும் உயரும் அபாயம்..!!

    உலகம்
    மீனவர்களுக்கு பேராபத்து.. புதிய தலைமைச் செயலகத்தால் பாதிப்பு..! CPI எதிர்ப்பு..!

    மீனவர்களுக்கு பேராபத்து.. புதிய தலைமைச் செயலகத்தால் பாதிப்பு..! CPI எதிர்ப்பு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி கவிழும்! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

    மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி கவிழும்! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    பருவமழை ஆலோசனை கூட்டத்திற்கு திமுக கவுன்சிலர்கள் வராதது வருத்தம்! அமைச்சர் மரிய வில்சன் பேட்டி!

    பருவமழை ஆலோசனை கூட்டத்திற்கு திமுக கவுன்சிலர்கள் வராதது வருத்தம்! அமைச்சர் மரிய வில்சன் பேட்டி!

    தமிழ்நாடு
    பயிர்க் கடன் தள்ளுபடி செய்யாத தவெகவுக்கு எதிர்ப்பு! இடைத்தேர்தலில் பிரச்சாரம் என விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

    பயிர்க் கடன் தள்ளுபடி செய்யாத தவெகவுக்கு எதிர்ப்பு! இடைத்தேர்தலில் பிரச்சாரம் என விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தீவிரமடையும் போர்ச் சூழல்... 101 டாலரை தாண்டிய கச்சா எண்ணெய் விலை..! மேலும் உயரும் அபாயம்..!!

    தீவிரமடையும் போர்ச் சூழல்... 101 டாலரை தாண்டிய கச்சா எண்ணெய் விலை..! மேலும் உயரும் அபாயம்..!!

    உலகம்
    மீனவர்களுக்கு பேராபத்து.. புதிய தலைமைச் செயலகத்தால் பாதிப்பு..! CPI எதிர்ப்பு..!

    மீனவர்களுக்கு பேராபத்து.. புதிய தலைமைச் செயலகத்தால் பாதிப்பு..! CPI எதிர்ப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share